ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் பதவியில் இருந்து அருந்ததி பட்டாசார்யா ஓய்வு பெற இருக்கும் நிலையில் அந்தப் பதவிக்கான நேர்காணல் வியாழக்கிழமை நடைபெற்று வருகின்றது.
தற்போதைய எஸ்பிஐ வங்கி தலைவரான அருந்ததி பட்டாசார்யாவின் பதிவுக் காலம் அக்டோபர் மாதம் 6ம் தேதியுடன் முடிகின்றது.
நேர்காணலில் பங்கேற்கும் இயக்குனர்கள்
எஸ்பிஐ வங்கியின் நிராவாக இயக்குனர்கள் பி ஸ்ரீராம், ராஜ்னிஷ் குமார், பிரவீன் குமார் குப்தா மற்றும் தினேஷ் குமார் காரா ஆகியோர் இந்த நேர்காணலில் பங்கேற்கின்றனர்.
நேர்கனலினை நடத்துனர்கள்
இவர்களுக்கான நேர்கனலினை முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையிலான வங்கிகள் வாரியம் பணியாகக் குழு நடத்துகின்றது.
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி துவங்கப்பட்ட பணியகம் அரசுக்கு சொந்தமான வங்கிகளின் ஆளுமைத் திட்டத்தை மேம்படுத்தவும், முக்கிய வங்கியின் தலைமை நியமனங்கள் மூலம் அரசாங்கத்திற்கு உதவுகின்றது.
அருந்ததி பட்டாசார்யாவின் பதவிக்காலம் நீட்டிப்பு
அக்டோபர் 2016-ம் ஆண்டுடன் அருந்ததி பட்டாசார்யாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதற்கு முக்கியக் காரணமாக எஸ்பிஐ துணை வங்கிகளுடனான இணைப்புக் கூறப்பட்டது.
இணைவு
எஸ்பிஐ வங்கியுடன் துணை வங்கிகள் இணைவது 2017 ஏப்ரல் 1 உடன் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.