வருகிறது 200 ரூபாய் நோட்டு.. ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் முடிவு எதற்காக..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டை தடை செய்யப்பட்ட பின்பு நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் நாட்டின் பணபுழக்கத்தை சீர்செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி புதிதாக 200 ரூபாய் நோட்டை வெளியிட முடிவு செய்துள்ளது.

அது புதுசல்ல இருக்கு..

கடைசி கட்டம்...

கடைசி கட்டம்...

நாட்டின் பணபுழக்கத்தை சீர்செய்யும் பொருட்டு, ரிசர்வ் வங்கி தனது கடைசி கட்ட திட்டமாக இந்திய வரலாற்றில் முதல் முறையாக 200 ரூபாயை வெளியிட முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் சாமாணியர்கள் மத்தியில் பணபுழக்கம் எளிமையானதாக இருக்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

 

அச்சடிக்க துவக்கம்..

அச்சடிக்க துவக்கம்..

இந்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அச்சகத்தில் ரிசர்வ் வங்கி புதிய 200 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணிகளை துவங்கியுள்ளது.

ஆனால் இதுக்குறித்து ரிசர்வ் வங்கி எவ்விதமான அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.

 

சாதகமானது..
 

சாதகமானது..

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 2000 ரூபாய் அறிமுகம் செய்தபோது மக்கள் மத்தியில் சில்லறை மாற்றத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கியது. ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி செயல்படுத்தி வரும் திட்டத்தின் படி 200 ரூபாய் நோட்டு என்பது பல வழிகளில் சாமானியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கருப்பு பணம்

கருப்பு பணம்

ஆனால் இதனை மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு கண்ணோட்டத்தில் பார்க்கும் போது பல வாய்ப்புகள் நமக்கு தெரிகிறது.

உண்மையில் இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் தடை செய்யப்பட்ட பின்பும் நாட்டின் கருப்பு பணம் முழுமையாக ஒழியவில்லை.

 

2,000 ரூபாய் நோட்டு..

2,000 ரூபாய் நோட்டு..

இதேவேளையில் ஏற்கனவே சந்தையில் போதுமான அளவிற்கு பண இருப்பு இருக்கும் வேளையில் ரிசர்வ் வங்கியின் இந்த 200 ரூபாய் நோட்டு புதிய கேள்வியை எழுப்பியுள்ளது.

தற்போது சந்தையில் 2,000 ரூபாய் நோட்டு மிகவும் குறைந்த அளவில் மட்டுமே புழக்கத்தில் இருக்கும் வேளையில் இதனை முழுமையாக நீங்கிவிட்டு அதற்கு இணையாக 200 ரூபாய் நோட்டை வெளியிடவும் செய்யலாம்.

 

சரியான  முடிவு..

சரியான முடிவு..

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது பல கருப்பு பண முதலைகளிடம் 2000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக சிக்கிக்கொண்ட நிலையில், கருப்பு பணத்தை நாட்டில் இருந்து முழுமையாக களைய இந்த புதிய 200 ரூபாய் நோட்டை மத்திய அரசு திரும்ப பெறலாம்.

ஒப்புதல்

ஒப்புதல்

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியின் நிர்வாக அமைப்புகளின் ஒப்புதலுக்கு பின்னரே ஆர்பிஐ அச்சடிக்கும் பணிகளை துவங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Printing of Rs 200 currency notes begins

Printing of Rs 200 currency notes begins
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X