மத்திய அரசு ஜிஎஸ்டி அமலாக்கம் செய்ய வேண்டிய இந்த பிசியான நேரத்திலும், சிறு சேமிப்பு திட்டம் மீதான வட்டியை 0.10 சதவீதம் குறைந்துள்ளது.
இதன் மூலம் சாமானிய மக்கள் அதிகளவில் முதலீடு செய்யும் பிபிஎப், என்எஸ்சி, கிஸான் விகாஸ் பத்திரா ஆகிய திட்டங்கள் மீதான வட்டியை மத்திய அரசு தற்போது குறைத்துள்ளது.
முக்கிய திட்டங்கள்
மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, PPF மற்றும் என்எஸ்சி திட்டங்களுக்கு 7.8 சதவீத வட்டியும், கிஸான் விகாஸ் பத்திரத்திற்கு 7.5 சதவீத வட்டியும் நிர்ணயம் செய்துள்ளது.
இதற்கு முன் PPF திட்டத்திற்கு 7.9 சதவீதம்
என்எஸ்ஈ திட்டத்திற்கு 7.9 சதவீதம்
கிஸான் விகாஸ் பத்திர முதலீட்டுக்கு 7.6 சதவீத வட்டியாக இருந்தது.
முத்த குடிமக்கள் திட்டம்
அதேபோல் 8.4 சதவீத வட்டியாக இருந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜ்னா திட்டத்திற்கு தற்போது 8.3 சதவீதமாக வட்டி குறைந்துள்ளது.
10 வருட திட்டம்..
மத்திய அரசின் இந்த சிறு சேமிப்பு முதலீட்டு திட்டங்கள் அனைத்தும் 10 வருடங்கள் முதிர்வு காலம் கொண்டது. மேலும் இதன் வட்டியை 3 வருடத்திற்கு ஒரு முறை மத்திய அரசு நாட்டின் வர்த்தக நிலையை கொண்டு மாற்றும்.
இந்த முறை இத்திட்டங்கள் மீதான வட்டியை 0.10 அல்லது 10 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.
பாதிப்பு
இந்த வட்டி குறைப்பு சாமானியர்களின் சேமிப்பு மற்றும் வட்டி வருமானத்தில் அதிகளவிலான பாதிப்பு ஏற்படும்.