பெங்களூரு: விப்ரோ நுகர்வோர் கேர் மற்றும் லைட் நிறுவனம் மைசூரில் உள்ள தங்களது தொழிற்சாலையினைச் சிஎப்எல் பொருட்கள் மற்றும் எல்ஈடி பல்ப்புகள் மீதான டிமேண்டுகள் குறைந்துள்ளதால் மூட முடிவு செய்துள்ளது.
விப்ரோ நிறுவனம் மென்பொருள், கணினி வன்பொருள்கள் மட்டும் இல்லாமல் வீட்டிற்குத் தேவைப்படும் நுகர்வோர் சாதன பொருட்கள் வணிகத்திலும் ஈடுபட்டு வருகின்றது. அதில் இருந்து இப்போது மைசூரில் உள்ள லைட் பிரிவை மட்டும் மூட முடிவு செய்துள்ளது.
முடிவு எப்போது எடுக்கப்பட்டது?
"இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆலை மூடப்பட வேண்டும் என்ற முடிவை நாங்கள் அரசாங்கத்திற்கும், பொருத்தமான அதிகாரிகளுக்கும் அறிவித்தோம், அனைத்து ஒழுங்குமுறை தேவைகளையும் நிறைவேற்றியுள்ளோம்," என்று அறிக்கையில் விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர்களின் நிலை
இங்குப் பணிபுரிந்து வந்த 84 தொழிலாளர்களும் விருப்ப ஓய்வை அறிவித்துவிட்டுச் செல்லுமாறு விப்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
உற்பத்தி
விப்ரோ நுகர்வோர் பராமரிப்பு மற்றும் லைட் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் CFL உற்பத்திக்கான தேவை குறைந்து வந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் எல்இடி உற்பத்திகளுக்கு அதிக முதலீடுகளை லைட் வர்த்தகத்தில் விப்ரோ நிறுவனம் செய்தும் தற்போது தொழிற்சாலையினை மூடியுள்ளது.
தேவை
கடந்த இரு ஆண்டுகளில், தேவைக் குறைந்துவிட்டதால், உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இந்த நிறுவனம் அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் மதிப்பிட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு மேலாக உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதால் உற்பத்தித் திறனை நிறுவனம் குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.