உலகின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான வால்மார்ட், இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்க இந்த அமெரிக்க நிறுவனம் சுமார் 900 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த முதலீட்டை கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சுமார் 15 கடைகள் புதிதாக திறக்க முடிவு செய்துள்ளது வால்மார்ட்.
வேலைவாய்ப்புகள்
இப்புதிய விரிவாக்கத்தின் மூலம் இம்மாநிலத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 30,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம்
இந்த விரிவாக்க மற்றும் முதலீட்டுக்கான வால்மார்ட் நிறுவனம் மகாராஷ்டிரா மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் இம்மாநில முதல்வர் தேவேந்திர பண்டாவிஸ் அவர்களும் கலந்துக்கொண்டார்.
விரிவாக்கம்
இந்த அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் தற்போது இந்தியாவில் ஔரங்காபாத் (மராத்வாடா) மற்றும் அமராவதி (வித்தர்பா) ஆகிய இரு இடங்களில் வர்த்தக கிளைகளை கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது.
2017ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வால்மார்ட் இந்தியாவில் 50 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.
அமேசான்
வால்மார்ட்க்கு போட்டியாக அமேசான் நிறுவனமும் சில்லறை உணவு பொருட்கள் விற்பனை சந்தையில் இறங்கியுள்ளது.