இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் மகாத்மா காந்தி 2005-ம் ஆண்டு வரிசை 20 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிட இருக்கின்றது. இந்த ரூபாய் நோட்டுகள் இப்போது பயன்பாட்டில் இருக்கும் 20 ரூபாய் நோட்டுகளைப் போன்றே காட்சி அளிக்கும்.
புதிய 20 ரூபாய் நோட்டுகள் 'S' எழுத்துடன் கூடிய எண் பேனல் மற்றும் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் இருக்கும் என்றும் ஆரிபிஐ அறிக்கை கூறியுள்ளது.
இரண்டு எண் பேனல்களிளும் 'S' எழுத்து நுழைக்கப்பட்டு இருக்கும் என்றும் தற்போது நடைமுறையில் மக்கள் பயன்படுத்தி வரும் அதே நோட்டுகள் போன்று தான் காட்சி அளிக்கும் என்று ஆர்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
முன்பு ஆர்பிஐ வங்கி வெளியிட்டுள்ள 20 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்றும் புதிய ரூபாய் நோட்டாக மாற்ற வெண்டும் என்பது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.