ரிலையன்ஸ் சாம்ராஜியத்தின் 40வது வருடாந்திர கூட்டம் இன்று நடந்தது, இக்கூட்டத்தில் பேசிய இக்குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். இதனுடன் இந்தியா அடுத்த 10 வருடத்தில் எப்படி இருக்கும்.. என்ன ஆகும் என்பதை எளிமையாக விளக்கினார்.
6 டிரில்லியன் டாலர்
அடுத்த 10 வருடத்தில் இந்திய பொருளாதாரம் தற்போதும் இருக்கும் 2.25 டிரில்லியன் டாலரில் இருந்து 6 டிரில்லியன் டாலராக உயர்ந்து சக்தி உடையது.
10 வருடங்கள்
இத்தகைய அதிரடி வளர்ச்சியைப் பெற மேற்கத்திய நாடுகளுக்கு 300 ஆண்டுகள் தேவைப்பட்டது, சீனாவிற்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் இந்தியாவில் வெறும் 10 வருடங்கள் போதும் கூறினார் முகேஷ் அம்பானி.
4வது தொழிற்துறை புரட்சி
இந்தியாவின் 4வது தொழிற்துறை புரட்சியில் ரிலையன்ஸ் குழுமமும் ஈடுபடத் தயாராகியுள்ளது. இந்தப் புரட்சி இந்திய மற்றும் உலகப் பொருளாதாரத்தில் அடுத்த 10 வருடத்தில் பல தரப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வர உள்ளது.
80வது சுதந்திர தினம்
இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது உலகின் 3 பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் எனத் தெரிவித்தார் முகேஷ் அம்பானி.
80வது சுதந்திர தினம் வருகிற 2027ஆம் ஆண்டு வருகிறது.
40 வருட வளர்ச்சி
மேலும் அடுத்த 10 வருடத்தில் இந்திய பொருளாதாரத்தின் அதிரடி வளர்ச்சியில் ரிலையன்ஸ் குழுமம் கடந்த 40 வருடத்தில் பெற்ற அனைத்தையும் இருமடங்காக்கும் எனக் கூறினார் முகேஷ் அம்பானி.
8,880 கோடி ரூபாய்
இந்தியாவில் இதுவரை எந்த ஒரு நிறுவனமும் செலுத்தாத அளவிற்குச் சுமார் 8,880 கோடி ரூபாயை வருமான வரியாகச் செலுத்தியுள்ளது. அதேபோல் 29,637 கோடி ரூபாயை சங்கம் மற்றும் கலால் வரியாக மட்டும் செலுத்தியுள்ளது.
நாட்டின் மொத்த கலால் வரி வசூல் அளவில் இது 5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 24 முதல் ஆரம்பம்
வேலைவாய்ப்பு
கேபிள் டிவி
போனஸ் பங்குகள்