சென்னை: ரிலையன்ஸ் நிறுவனம் உலகின் மிகப் பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் நிறுவனமான ஃபாக்ஸ்கான் உடன் இணைந்து இரட்டை-சிம் கொண்ட மொபைல் போனை தாரிக்க இருக்கின்றது.
இதற்கான பேச்சுவார்த்தையில் இரண்டு நிறுவனங்களும் ஈட்டுப்பட்டு வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம்.
ஃபாக்ஸ்கான் நிறுவனம்
ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன், ஐபோடு, சியோமி உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்போன்களைத் தயாரிக்க இந்தியாவில் உதவி வருகின்றது. இப்படிப் பட்ட ஃபாக்ஸ் கான் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1500 ரூபாய் முதல் 1600 ரூபாய்க்கு உள்ளான இரட்டை சிம் ஒன்றை விரைவில் வெளியிடும் என்றும் நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
2ஜி, 4ஜி சிம் மொபைல் விலை
மேலும் 2ஜி மற்றும் 4ஜி சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் வகையில் இந்த மொபைல் போன் தயாரிக்கப்படும் இதன் விலை வரியுடன் 1625 ரூபாய் முதல் 2,200 வரை இருக்க வாய்ப்புள்ளது.
சிப்கள்
மொபைல் போனிற்கான சிப்கள் சாங்காய் சார்ந்த செமிகண்டக்டர் நிறுவனம் ஸ்ப்ரெட்ட்ரோம் கம்யூனிகேஷன்ஸ் உற்பத்தி செய்து அளிக்குமாம்.
பண்டில் ஆஃபர்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்தப் போன் சந்தைக்கு வரும் போது பண்டில் ஆஃபருடன் 4ஜி சேவையினை அளிக்கும் என்று தமிழ் குட்ரிட்டர்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
போன் எக்ஸ்சேஞ் சேவை
முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் டாரிப் கட்டணங்கள், போன் வாங்கச் சலுகைகள் மற்றும் போன் எக்ஸ்சேஞ் சேவைகள் போன்றவற்றை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.