செயலி மூலமாக டாக்ஸி சேவை அளித்து வரும் உபர் நிறுவனம் வெள்ளிக்கிழமை நொய்டா மற்றும் காசிபாத்தில் உபர் மோடோ என்ற சேவையினை அறிமுகம் செய்துள்ளது.
இந்தச் சேவை ஏற்கனவே குர்கான் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய நகரங்களில் உபர் வழங்கி வருகின்றது. சரி, உபர் மோடோ சேவை என்றால் என்ன அதனால் பைக் பிரியர்களுக்கு என்ன நன்மை என்று இங்குப் பார்ப்போம்.
நகரத்தில் எளிமையாகப் பயணம் செய்யலாம்
உபர் நிறுவனத்தின் நிர்வாகி பிரபஜித் சிங் உபர் மோடோ சேவை மூலமாக டெல்லி புற நகர் மற்றும் வட இந்தியாவின் பிற நகரப் பகுதிகளில் உள்ளவர்கள் எளிமையாகப் பயணம் செய்ய உதவும் என்று கூறினார்.
பொருளாதாரத்தில் மாற்றம்
உபர் மோடோ சேவையினை மாநில அரசு ஏற்றதற்கு நன்றி என்றும் இதன் மூலம் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நொய்டா மற்றும் காசிபாத்
"நொய்டா மற்றும் காசிபாத் இந்தச் சேவை துவங்கப்பட்டுள்ளதால், பைக் ரைடர்ஸ், போக்குவரத்து, நெரிசல் மற்றும் கடைசி நிமிட இணைப்பு போன்ற சிக்கல்களைப் பற்றிக் கவலைப்படாமல் டெல்லி புற நகர் முழுவதும் பயணிக்கும் வாய்ப்பை வழங்குவோம் என்று உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
7 நகரங்களில் உபர் மோடோ சேவை
உபர் மோடோ சேவை ஃபரிதாபாத், குர்கான், நொய்டா, கஜியாபாத், ஹைதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் கிடைக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் இது வரை 2 மில்லியன் டிரிப்புகள் வரை சேவை அளித்துள்ளது.
கட்டணம் எவ்வளவு
உபர் மோடோ சேவையின் மூலமாகக் குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் டிராப்பிக் சிக்கல் இல்லாமல் பயணம் செய்யலாம். ஆனால் இந்தச் சேவை நொய்டா மற்றும் காசிபாத்தில் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் உபர் மோடோ வழங்கப்படுகின்றது.