டெல்லி: மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் தனது லோகோ-வை மாற்ற முடிவு செய்துள்ளது.
புதிய லோகோ மிகவும் இளைமைதுவமாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ள தூர்தர்ஷன் இதற்காக போட்டியை அறிவித்துள்ளது.
1959ஆம் ஆண்டு முதல்
இந்தியாவின் இளைஞர்களை கவரவும், தூர்தர்ஷனை புதிய பிராண்டாக சந்தையில் முன்னிறுத்தவும், சந்தையில் இருக்கும் முன்னணி டிவி சேனல்களுக்கு இணையாக தூர்தர்ஷன் வளர முடிவு செய்துள்ளது.
இதற்காக 1959ஆம் ஆண்டு முதல் மாற்றமால் வைத்திருக்கும் தூர்தர்ஷன் லோகோவை மாற்ற முடிவு செய்துள்ளது இதன் நிர்வாகம்.
இளைஞர்கள்
இப்புதிய லோகோ இளைஞர்களை கவர்வதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையாக கொண்டு தூர்தர்ஷன் இப்போட்டியை அறிவித்துள்ளது. இப்போட்டியில் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் மக்களும் கலந்துக்கொள்ளலாம்.
1 லட்சம் ரூபாய் பரிசு
ஆகஸ்ட் 13வரை லோகோ டிசைன்களை ஏற்றுக்கொள்ளும் தூர்தர்ஷன், தேர்வு செய்யப்படும் டிசைன்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு அளிக்க உள்ளது.
23 சேனல்கள்
தூர்தர்ஷன் கட்டுப்பாட்டில் இந்தியாவில் சுமார் 23 சேனல்கள் இயங்கி வருகிறது. மத்திய அரசு ஆல் இந்தியா ரோடியோ அடுத்த தற்போது தூர்தர்ஷனையும் பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என திட்டமிட்டு வருகிறது.
இதற்காக அதிகளவிலான நிதியையும் ஒதுக்கியுள்ளது.
வருவாய்
மார்ச்31 உடன் முடிந்த நிதியாண்டில் மட்டும் தூர்தர்ஷன் சுமார் 827.5 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை பெற்றது. ஆனால் வருடாந்திர இலக்கு 800 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முந்தைய நிதியாண்டில் இதன் வருவாய் அளவு 755 கோடி ரூபாய்.