டெல்லி: இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அமலுக்குக் கொண்டு வந்துள்ளது வரவேற்க கூடியது என்றும் இதனால் இந்தியா அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகப் பெரிய மாற்றத்தினைக் காணும் என்று சிங்கப்பூர் டெப்டி பிரதமர் தர்மன் சன்முகரத்தனம் கூறினார்.
ஆச்சர்யம்
சிறந்த பொருளாதாரத்திற்காக அரசியல் ரீதியான கட்டமைப்பினை திறன் பட நிறுவி இந்தியா ஆச்சர்யத்தினை அளித்துள்ளது. கருப்புப் பணம் மற்றும் ஊழல் போன்றவற்றை வெளிக்கோண்டு வருவதில் இந்தியா சிறப்பாகச் செயல்படுகின்றது என்று டெல்லியில் நடைபெற்ற பொருளாதாரக் கூட்டத்தின் தெரிவித்தார்.
பொருளாதாரங்களின் சவால்கள்
மேம்பட்ட மற்றும் வளரும் பொருளாதாரங்களின் சவால்கள் ஒத்ததாக இருப்பினும் இந்தியாவின் சவால்கள் மிகப் பெரியது என்று சண்முகரத்னம் மேலும் கூறினார்.
வேலை வாய்ப்பு
இந்தியாவில் வேலை வாய்ப்பினை உருவாக்குவது தான் மிகப் பெரிய சவால், இதனை இந்தியா 10 வருடத்தில் செய்ய வேண்டும். இல்லை என்றால் இது மிகப் பெரிய பிரச்சனையாக வெடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆலோசனை
வேலை வாய்ப்பினை உருவாக்கவில்லை எனில் மக்கள் தொகை மிகப் பெரிய சிக்கலினை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார், வேகமான வேலை உருவாக்கம் மற்றும் திறன் அடிப்படையிலான கற்றல் முறைகளுக்கு ஆலோசனைகளும் வழங்கினார்.