சென்னை: இந்தியாவில் தங்கத்தின் விலை மாறுவதற்குபல்வேறுகாரணங்கள் உண்டு. உண்மையைச் சொல்லப்போனால் இவை எண்ணிலடங்காதவை.
ஆனால் இதில் பன்னாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை மற்றும் அந்நிய செலாவணி மதிப்புகளில் ஏற்படும் மாற்றம் ஆகிய இரண்டும் மிக முக்கியமானவை.
பன்னாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை
இந்தியாவில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு மிகப்பெரும்காரணமாக இருப்பது பன்னாட்டுச் சந்தைகளில் நிலவும் விலைகளே.
உள்நாட்டுத் தேவை
இந்தியாவில் சுரங்கங்கள் ஏதும் தற்போது உபயோகத்தில் இல்லைஎன்பதால் உள்நாட்டுத் தேவைகளுக்காக இறக்குமதி செய்கிறோம்.எனவே பன்னாட்டு விலைகள் உயருமானால் அந்நிய செலாவணிமதிப்பில் அதிக மாறுதல்கள் இல்லாத நிலையில் தங்கத்தின் விலைஇந்தியாவிலும் உயரும்.
டாலர் மதிப்பு
பன்னாட்டுத் தங்க விலை பல காராணிகளால் மாறுபடுகிறது.உதாரணமாக, டாலர் மதிப்பு குறையும் போது தங்க விலைஅதிகரிக்கவும், டாலர் விலை அதிகரிக்கும் போது குறையவும் செய்யும்.
சீனா மற்றும் இந்தியா
இவையல்லாது சீனா மற்றும் இந்தியா போன்ற தங்கத் தேவை அதிகம்காணப்படும் நாடுகளில் நிலவும் தங்கத்தின் தேவையைப் பொருத்தும்தங்க விலை மாற்றமடைவதுண்டு.
இந்த நாடுகளில் எடுக்கப்படும் சில எதிர்மறையான கொள்கை முடிவுகள்தங்கத்தின் விலையைப் பாதிக்கலாம். உதாரணமாக இந்தியா தங்கத்தின்மீதான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளதை கவனிக்கலாம்.
ரூபாயின் மதிப்பும் தங்கத்தின் விலையும்
இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்படும் மாற்றமும் தங்க விலைமாறுபாட்டிற்கு ஒரு முக்கியக் காரணமாகும். வந்கிகளிடையேயானவர்த்தகத்தில் டாலருக்கு ரூபாயின் மதிப்பு குறையும் போது, அதுதங்கத்தின் விலையை அதிகரிக்கச் செய்யும்.
எனவே மகா ஜனங்களே தங்கம் வாங்கும்போது யோசித்துசெயல்படுவது நல்லது.