உங்கள் பெற்றோருக்கு உடல்நல காப்பீடு பாலிசி வாங்குவதன் மூலமாகவும் கூட வரிகளை நீங்கள் மிச்சப்படுத்தலாம். இப்படிச் செய்வதன் மூலம் மதிப்புமிக்கச் சேமிப்புகளை உடல்நல பராமரிப்பு செலவுகளை ஈடுகட்டப் பயன்படுத்துவதோடு, அதிக வரிக் கட்டுவதில் இருந்தும் மிச்சப்படுத்தலாம்.
வரி கட்டுபவர்களுக்கு, பெற்றோருக்கான உடல்நல காப்பீடு ப்ரீமியம் தொகைகள் மற்றும் மருத்துவச் செலவுகளான மொத்த விலக்கு, வருமான வரிச் சட்டம் பிரிவு 80 டி-யின் கீழ், வருடத்திற்கு ரூ.30,000/- வரையாகும். தனக்கு, தன் கணவன்/மனைவிக்கு மற்றும் குழந்தைகளுக்கு வருடத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.25,000/- விலக்குக்கு மேல் தான் பெற்றோருக்கான விலக்குக் கருதப்படும்.
வரி கட்டுபவரின் மீது பெற்றோர் நிதி ரீதியாகச் சார்ந்திருந்தாலும் இல்லையென்றாலும், பெற்றோருக்காகக் கட்டப்படும் உடல்நல காப்பீடு ப்ரீமியம் தொகைக்கு விலக்கு உண்டு. வரி விலக்கைப் பெற வேண்டுமென்றால், இந்த ப்ரீமியம் தொகைகளைக் காசோலை மூலமாகச் செலுத்தியிருக்க வேண்டும்.
சார்ந்திருக்கும் ஊனமுற்ற குழந்தைகளுக்கான மருத்துவச் சிகிச்சை அல்லது புனர்வாழ்வுக்கு ஏற்படுகிற செலவுகளுக்கு, பிரிவு 80டிடி-யின் கீழ், ரூ.75,000 வரை வரி விலக்கைக் கோரலாம். தீவிர இயலாமை என்றால், இந்த வரி விலக்கு ரூ.1.25 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் குழந்தை குறிப்பிட்ட ஒரு வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தால், பிரிவு 80 டிடிபி-யின் கீழ் அந்தச் சிகிச்சைக்காகச் செலவழித்த தொகைக்கு வரி விலக்கைப் பெறலாம்.