கடந்த மூன்று வருடங்களாகப் பங்குகள் இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்கள் நல்ல லாபத்தை அளித்துள்ளன. எல்லாச் சூழல்களிலும் இந்த முதலீடுகளின் சிறப்பான லாபத்தை வழங்கியுள்ளது.
இந்த ஃபண்டுகள் மிகவும் வெளிப்படையான இலவச வரி விலக்க ஆதாயங்கள் மற்றும் பணப்புழக்கம் வழங்கவும், மிகவும் குறைந்த விலை மற்றும் மிக அதிக லாபமும் அளிக்கும்.
ஈக்விட்டி நிதித் திட்டங்களில் முதலீடு செய்யும் போது பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் முறையான முதலீட்டுத் திட்டத்தை பயன்படுத்தி முதலீடு செய்ய சொல்வதில்லை.
பங்குகள் இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்களில் 15 சதவீதம் வரை தான் முறையான முதலீட்டுத் திட்டங்கள் மூலமாகப் பெறப்படுகிறது. 85 சதவீதம் வரை மொத்த தொகையாகவே முதலீடு செய்யப்படுகிறது.
எங்களுடைய கணக்கின் படி மொத்தமாகப் பங்குகள் இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதினால் குறைந்த அளவே லாபம் பெறப்பட்டுள்ளது.
அதுவே முறையான முதலீட்டுத் திட்டங்கள்(SIP) முலம் முதலீடு செய்யும் போது குறுகிய கால வரியை மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பெறலாம்.
ஆனாலும், இதை ஒரு வரி சேமிக்கும் திட்டமாகப் பார்க்காமல் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது இதுவே ஒரு சிறந்த முதலீடாக அமையும்.
சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்டுகள்
இந்த தரவு 2016 ஆகஸ்ட் 12-இன் படி கொடுக்கப்படுகிறது.ஆக்ஸிஸ் லாங் டர்ம் ஈக்விடி ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்யும் போது 3 வருடத்திற்கு 31.55% வரை லாபம் பெறலாம்.
ரிலையன்ஸ் டாக்ஸ் சேவர் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்வதினால் 3 வருடத்திற்கு 34.04% வரை லாபம் பெறலாம்.
டிஎஸ்பி பிளேக்ராக் டாக்ஸ் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்வதினால் 3 வருடத்திற்கு 29.02% வரை லாபம் பெறலாம்.
பிர்லா சன்லைப் டாக்ஸ் ரிலீஃப் 96 திட்டத்தில் முதலீடு செய்வதினால் 3 வருடத்திற்கு 29.73% வரை லாபம் பெறலாம்.
ஃபிரான்க்ளின் இந்தியா டாக்ஸ் ஷீல்டு ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்வதினால் 3 வருடத்திற்கு 29.02% வரை லாபம் பெறலாம்.