வாடகை வீட்டில் தங்கி இருக்கிறீர்களா, அப்படியானால் உங்கள் நிறுவனத்தில் வாடகைக்கு எச்ஆர்ஏ அலவன்ஸ் அளிக்கிறார்களா அப்படி இல்லை என்றால் அதற்கு எப்படி உரிமை கோருவது என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
வாடகை வீட்டில் தங்கி இருப்பவர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) அளிக்கிறார்களா என்பதைத் தெரிந்து வைத்து இருத்தல் வேண்டும்.
அப்படி அளிக்கிறார்கள் என்றால் நீங்கள் பின்வருமாறு வீட்டு வாடகை அலவன்ஸ் பெற இயலும்.
1) செலுத்தப்பட்ட மொத்த வாடகை தொகை
2) அடிப்படை ஊதியத்தில் இருந்து செலுத்தப்பட்ட 10 சதவீதம் வாடகை கழித்தல்
3) மாநகரங்களில் வசித்துவருகிறீர்கள் என்றால் 50 சதவீத சம்பளம் அல்லது மற்ற இடங்களில் வசித்துவருகிறீர்கள் என்றால் 40 சதவீத சம்பளம்
ஆனால் பலருக்கு இது மட்டும் இல்லாமல் பின் வரும் பல விதிகளும் தெரிவதில்லை:
உங்கள் பெற்றோருக்கு சொந்தமான வீட்டில் அவர்களுடன் நீங்கள் வசித்து வந்தால் வீட்டு வாடகை அலவன்ஸ் பிடித்தலை திரும்பப் பெறலாம். அதற்கு அந்த வாடகையை வீட்டில் இருந்து வருமானமாக அவர்கள் காண்பிக்க வேண்டும். ஆனால் உங்கள் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறீர்கள் அதன் வாடகையை உங்கள் அவர்கள் செலுத்தி வரும்போது உங்களால் வாடைகைப்படி பிடித்தலை திரும்பப் பெற இயலாது. அதே போல உங்கள் மனைவின் பெயரிலும் வாடகை செலுத்தி வீட்டு வாடகை அலவன்ஸ் பெற இயலாது வேலை நிமித்தமாக இரண்டு எடங்களீல் தங்கும் பொது எச்ஆர்ஏ மற்றும் வீட்டுக் கடன் பிடித்தம் என அசல் தொகையாக ரூ.1.5 லட்சம் வரையிலும், வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சம் வரையிலும் பெறலாம். உங்கள் சம்பளத்தில் உங்கள் சம்பளத்தில் இல்லாதபோது பிரிவு 80சிஜி கீழ் நீங்கள் திரும்பப்பெறும் உரிமை கோரலாம். இந்த வசதி எருக்கெல்லாம் வீட்டு வாடகை அலவன்ஸ் சம்பளத்தில் இருந்து இல்லையோ வர்களுக்கு மட்டுமே. படிவம் 10பிஏ தாக்கல் செய்தும் உங்கள் எச்ஆர்ஏ திரும்பப்பெறும் உரிமைகோரலை செய்யலாம். இந்தப் பிரிவின் கீழ் நீங்கள் திரும்பப்பெறும் உரிமை கோரும் போது கண்டிப்பாக நீங்கள் வாடகை வீட்டில் வசித்து வர வேண்டும் அது மட்டும் இல்லாமல் உங்களுக்குச் சொந்தமான வீடு ஏதும் நீங்கள் வசிக்கும் அதே நகரத்திற்குள் இருத்தல் கூடாது. உங்கள் பெற்றோருடன் வசித்தல்
மனைவி
எச்ஆர்ஏ மற்றும் வீட்டுக் கடன்
எச்ஆர்ஏ சம்பளத்ஹ்டில் பிடித்தம் செய்யாத போது
படிவம் 10பிஏ