ஆயுள் காப்பீடு திட்டங்கள் மக்களின் வாழ்க்கையில் இன்று கண்டிப்பாக தேவையான ஒன்றாக மாறிவிட்டது. ஒருவர் தனது மாத வருமானத்தில் இருந்து 6 முதல் 8 சதவீதம் வரை காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
கடன், குடும்ப செலவுகள், இழப்பு போன்று ஏதேனும் சிக்கல் ஏற்படும் போது எனப் பல சமயங்களில் காப்பீடு திட்டங்கள் உதவும்.
இங்கு நாங்கள் உங்களுக்காக வாழ்க்கையில் 5 முறை கூடுதல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் எதற்காக எல்லாம் முதலீடு செய்ய வேண்டும் என்று இங்குக் குறிப்பிட்டு உள்ளோம்.
திருமணத்திற்குப் பிறகு
திருமணத்திற்குப் பிறகு உங்கள் மனைவி வேலைக்குச் சென்று வந்தாலும் தனது வாழ்க்கையின் கால கட்டத்தில் அல்லது ஏதேனும் குடும்ப சூழல் காரணமாக கண்டிப்பாக அவர்களுக்கு உங்களது ஆதரவு தேவைப்படும்.
எனவே உங்கள் பெயரில் நீங்கள் கண்டிப்பாக ஒரு இன்சூரன்ஸ் பாலிஸி வைத்திருப்பது நல்லது.
நீங்கள் பெற்றோர் ஆகும் போது
குழந்தை பிறந்த பிறகு உங்களது வாழ்க்கையில் மேலும் பல பொறுப்புகள் வந்து சேரும்.
எனவே புதிய குடும்பத்திற்காக ஒரு காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது.
உங்கள் பெற்றோரின் ஓய்விற்குப் பிறகு
உங்களது பெற்றோர் வருமானத்தை நம்பி நீங்கள் வாழ்கிறீர்களா அப்படியானால் அவர்களது வருமான குறையும் போது அல்லது அவர்கள் வேலையை விட்டு நிற்கும் போது கண்டிப்பாக நீங்கள் ஒரு காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்தல் வேண்டும்.
பிக் டிக்கெட் லோன்
உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்து அதனால் குடும்பம் பாதிக்கப்படும் என்று கருதுகிறீர்களா உங்களது கடன் தொகை உட்பட அனைத்திற்கும் சேர்த்து ஒரு காப்பீடு திட்டத்தைத் துவங்குங்கள்.
சொந்த வணிகம் செய்கிறீர்களா
ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் போது அல்லது சொந்தமாக தொழில் செய்து வரும் போது அரசுத் துறை நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பெறும் அனைத்து நளன்களையும் நீங்கள் இழப்பீர்கள். அதற்காக ஒரு காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது.