நிதி தேவைக்காகத் தங்க நகைகள், வீட்டில் இருக்கும் பாத்திரங்களை அடகு வைக்கும் காலம் போய், மக்கள் இன்று நேரடியாக வங்கிகளுக்கு வந்த கடன் வாங்கும் அளவில் மக்கள் மத்தியில் புரிதலும், வங்கிகள் இந்தியா முழுவதும் சேவை அளிக்கிறது.
ஆனால் வங்கிகளில் கடன் வாங்குவது சாதாரணக் காரியமில்லை. அதற்குப் பல தகுதிகளை நாம் பூர்த்திச் செய்ய வேண்டிய உள்ளது.
தனிநபர் பரிவில் வியாபாரம் செய்பவர்களை விடவும் மாத சம்பளம் வாங்குவோருக்கும் வங்கிகளில் அதிகப்படியான வாய்ப்புகளுக்கும், சலுகைகளும் உள்ளது. சம்பளக்காரர்களுக்கு வங்கிகளில் அளிக்கப்படும் கடனுக்கான சலுகைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
சிறப்புக் கடன்
வங்கிகள் மற்றும் என்.பி.எஃப்.சி கள் இரண்டும் தொழில் முனைவோர் எனக் கருதப்படுகிற மருத்துவர்கள், பட்டய கணக்காளர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள் மற்றும் நிறுவன செயலர்கள் போன்ற சுயதொழில் புரிவோர் அல்லது ஊழியர்களுக்குச் சிறப்புக் கடன் வழங்குகின்றன.
பாதுகாப்பற்ற கடன்
தொழில்சார் கடன்கள் (Professional loans) கூட்டுப் பாதுகாப்பு (பினையம்) இல்லாத காரணத்தால் பாதுகாப்பற்ற கடன் பிரிவில் அடங்கும்.
குறைந்த வட்டி
இப்பிரிவில் இயல்புநிலை விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால், தொழில்சார் கடன்கள் குறைந்த விகிதங்கள், அதிகக் கடன் தொகை மற்றும் எளிதான செயலாக்க வசதிகளைக் கொண்டுள்ளன.
30 லட்சம் வரை கடன்
கடன் காலவரையறை 1 முதல் 5 ஆண்டுகள் வரை மாறுபடுகிறது மற்றும் கடன் தொகை தற்போதைய வருமானம் மற்றும் செலுத்தும் திறன் பொறுத்து ரூ 30 லட்சம் அல்லது அதற்கு மேலும் இருக்கமுடியும்.
குறைந்தபட்ச தகுதி
பட்ட படிப்புச் சான்றிதழ் மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரு குறைந்தபட்ச தகுதிக்குப் பின்னான அனுபவம், இந்தக் கடன் பெறுவது தேவைப்படுகிறது.