வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ கட்ட முடியவில்லையா..? கவலைப்படாதீங்க இதை ஃபாலோ பண்ணுங்க

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் அனைவரின் வாழ்க்கை முடிவுகளும் எதிர்காலத்தைப் பற்றிய சாதாரண ஊகங்களை அடிப்படையாகக் கொண்டவை. இருப்பினும், நமது எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றதென்பதை நாம் வெகு குறைவாகவே அறிந்து வைத்திருக்கின்றோம். விஷயங்கள் கட்டுப்பாடின்றிப் போகும் போது நாம் சிக்கல்களில் இருப்பதை உணர்கின்றோம்.

 

பிரச்சனை பணவியல் சார்ந்தாக இருந்தால் இன்னும் பெரியதாகத் தெரிகிறது. தனிப்பட்ட சோகமாக இருந்தால், நமது தனிப்பட்ட இடத்தில் அந்தரங்கமாக வருந்தலாம். இருப்பினும், உங்கள் பிரச்சனைகளில் அடுத்தவர்கள் ஈடுபட்டு, அதிலும் அவர்களது ஈடுபாடு நிதி தொடர்பானதாக இருந்தால், தவிர்க்க முடியாமல் அந்தப் பிரச்சனை பொது வெளிக்குப் போகும். உயர்மட்டத்துத் தொழிலதிபர்களான விஜய் மல்லையா மற்றும் சுப்ரதா ராய் சஹாரா போன்றோரின் பொதுவெளிக்கு வந்த வழக்குகள் இதைப் பற்றி உங்களுக்குச் சொல்லும்.

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்

இந்தச் சூழ்நிலையில் சில தனிப்பட்ட காரணங்களால் உங்களால் வீட்டுக் கடனுக்கான சமன்படுத்தப்பட்ட மாதாந்திரத் தவணைகளை (EMI) செலுத்த முடியாமல் போனால் உங்கள் தேர்வுகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது

என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது

பணச் சிக்கல்களின் விளிம்பில் இருக்கும்போது வீட்டுக்கடனுக்கான ஈஎம்ஐ செலுத்த வேண்டிய நேரம் வரும்போது செலுத்த முடியாமல் போனால் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் பற்றியே பார்க்கப்போகிறோம்.

அழைப்புகளைத் தவிர்க்காதீர்கள்
 

அழைப்புகளைத் தவிர்க்காதீர்கள்

அந்த வழக்கமான தொலைப்பேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் தொல்லைத் தருவதாக இருக்கும் மேலும் வங்கி உங்களை மதிப்பிற்குரிய வாடிக்கையாளராக நினைத்திருந்த காலங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்தும். இந்த எண்ணங்களால் தன்னிலை இழக்காதீர்கள். உண்மை என்னவென்றால், கடன்கள் என்பது ஒரு பொறுப்பாகும்.

நீங்கள் சட்டப்பூர்வமாக அதைத் திருப்பிச் செலுத்த கடமைப்பட்டிருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் வேண்டுமென்றே கடன் தவணைகளைக் கட்டத் தவறினால், உங்களுக்குச் சிறைத்தண்டனை கூட விதிக்கப்படலாம் என்கிற உண்மையை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். அவர்களைத் தவிர்ப்பதற்குப் பதிலாக வங்கியின் தொலைப்பேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்குப் பதிலளியுங்கள்.

அனைத்து நேரங்களில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரே வழி உரையாடல் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்.

 

உண்மைகளை மறைக்காதீர்கள்

உண்மைகளை மறைக்காதீர்கள்

பாதி உண்மைகளை மட்டுமே சொல்வது நல்ல ஆலோசனை அல்ல. ஒருவேளை நீங்கள் வேலையை இழந்ததன் காரணமாக மாதாந்திரத் தவணைகளைக் கட்ட முடியாமல் இருக்கலாம் மற்றும் உங்களால் சந்தையில் உள்ள மோசமான நிலவரம் காரணமாக விரைவாக வேறு ஒரு வேலையைக் கண்டறிய முடியாமல் இருக்கலாம். காரணம் ஏதுவாக இருந்தாலும் வங்கியிடம் இது தான் விஷயமென்று சொல்லி விடுங்கள்.

வங்கியிடம் மூன்று மாதங்களுக்குப் பிறகு மாதாந்திர தவணைகளை ஒழுங்காகச் செலுத்தத் தொடங்குகிறேன் என்பது போன்ற வாக்குறுதிகளை அளிப்பது நல்ல ஆலோசனை அல்ல. வங்கியிடம் எந்த அளவுக்கு வெளிப்படையாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்குச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 

வங்கியைத் தொடர்பில் வைத்திருங்கள்

வங்கியைத் தொடர்பில் வைத்திருங்கள்

உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க ஏதேனும் தெய்வீக தலையீடு நடக்கும் என்று கடைசி நிமிடம் வரை காத்திருக்காதீர்கள். உங்களிடம் இருக்கும் சில சேமிப்புகள் சிக்கலான நேரங்களில் கை கொடுக்கலாம். ஆனால் அவையும் சில மாதங்களுக்கு மட்டுமே நீடிக்கும். அதனால் தான் ஒரு பிரச்சனையின் தொடக்கத்திலிருந்தே வங்கியுடன் தொடர்பில் இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.

அப்படி இருப்பதால், உங்களுக்கு உண்மையிலே பிரச்சனை இருக்கிறது மற்றும் நீங்கள் வேண்டுமென்றே தவணை கட்டுவதிலிருந்து தவறவில்லை என்பதற்கு ஆதாரமாகச் செயல்படும். மேற்கொண்டு உண்மையை நிரூபிக்க உங்கள் அனைத்துக் கோரிக்கைகளையும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும்.

 

உங்கள் தேர்வுகள் என்ன?

உங்கள் தேர்வுகள் என்ன?

ஒரு பணப் பிரச்சனை ஏற்பட்டவுடன் உங்கள் மனதில் தோன்றும் முதல் எண்ணம், வங்கியானது உங்கள் சொத்துக்களைக் கையகப்படுத்திக் கொண்டு, அவற்றைச் சந்தையில் ஏலத்திற்கு விட்டு பின்னர் அவர்களது தவணைப் பணத்தை மீட்டுக்கொள்வார்கள் என்பதாக இருக்கும்.

இருப்பினும் அது மிக மோசமான சூழ்நிலைகளில் எடுக்கப்படும் கடைசிக் கட்ட நடவடிக்கையாக இருக்கும். நீங்கள் கவனமாகச் சூழ்நிலையைக் கையாண்டால் அது போன்ற சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது.

 

அவகாசம்

அவகாசம்

நீங்கள் வங்கியிடம் பேசி ஈஎம்ஐ கட்டுவதற்குச் சில நாட்கள் விடுமுறையைப் பெறலாம். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு, உங்கள் கடன் பொறுப்பைச் செலுத்த நீங்கள் அதிகரிக்கப்பட்ட மாதாந்திர தவணைத் தொகையைச் செலுத்த வேண்டி வரலாம்.

உங்களுக்கு உண்மையாகவே பிரச்சனை இருந்தால் மேலும் நீங்கள் இதுவரையிலும் கடன் செலுத்தி வந்த பதிவுகள் குறை கூற முடியாதபடி சீராக இருந்தால், வங்கிகள் இந்த வசதியை உங்களுக்கு உடனடியாக வழங்க ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கும்.

 

மறுசீரமைப்பு

மறுசீரமைப்பு

நீங்கள் உங்கள் வீட்டையும் மறுசீரமைப்புச் செய்து கொள்ளலாம். இதனால் உங்கள் மாதாந்திர தவணையைச் சிறிதளவு அதிகமாகச் செலுத்த வேண்டி இருக்கும் மற்றும் கடன் செலுத்தும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டியிருக்கும்.

இது தற்போது உங்களுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிதிப் பிரச்சனையைச் சமாளிக்கச் சிறந்த வழியாகும்.

 

நிதி நெருக்கடி

நிதி நெருக்கடி

ஒருவேளை உங்கள் நிதி நெருக்கடி மிக ஆழமானதாக இருந்து உங்களால் வருங்காலத்தில் நிதி நிலைமையில் உங்களால் எந்த விதமான முன்னேற்றத்தையும் காண முடியாத சூழ்நிலையில் இருந்தால், நீங்கள் ஒரே முறையில் மொத்தப் பணத்தையும் செலுத்தி விடலாம்.

இந்தச் செயல்முறையில் வங்கி கடனாளியிடம் ஒரு பெரிய மொத்த தொகையைப் பெற்றுக் கொண்டு வழக்கிற்குத் தீர்வு காணும். ஆனால் இது நடக்க வேண்டுமென்றால் நீங்கள் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை இதற்குச் சமாதானப்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக, நீங்கள் வங்கியைச் சமாதானப்படுத்துவதில் வெற்றியடைந்து விட்டால், கடனை மொத்தமாக அடைத்து விடுங்கள். ஆனால் இதனால் நீங்கள் வருங்காலத்தில் மற்றொரு கடன் வாங்குவது கடினமாகிவிடும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Not Able To Pay Home Loan EMIs? Dont Panic just follow this

Not Able To Pay Home Loan EMIs? Dont Panic just follow this
Story first published: Tuesday, May 23, 2017, 11:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X