சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறிய தலைவர்கள்.. சைர்ஸ் மிஸ்திரி முதல் ஜான் ஃபெல்லோஸ் வரை..!

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் அதன் முக்கியப் பொறுப்பாளர் திடீரென அந்நிறுவனத்தை விட்டு விலகினால் அது எந்த அளவுக்குப் பேசப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.

By Siva Lingam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் அதன் முக்கியப் பொறுப்பாளர் திடீரென அந்நிறுவனத்தை விட்டு விலகினால் அது எந்த அளவுக்குப் பேசப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் டாடா நிறுவனத்தில் இருந்து சைரஸ் மிஸ்ட்ரி விலகியபோது (நீக்கப்பட்ட போது) உலகத் தொழில் நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்தன. சைரஸ் விலகியதற்கான காரணத்தை அவரோ அல்லது டாடா நிறுவனமோ தெரிவிக்கவில்லை என்பதால் இன்று வரை அது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறிய தலைவர்கள்.. சைர்ஸ் மிஸ்திரி முதல் ஜான் ஃபெல்லோஸ் வரை..!

ஆனால் அதே நேரத்தில் உலகப்புகழ் பெற்ற தொழில் நிறுவனங்களில் இது ஒன்றும் புதிது அல்ல. இதேபோல் முன்னணி நிறுவனங்களில் இருந்து விலகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் எட்டு பேரை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்

மார்ட்டின் விண்டர்கோர்ன், வோல்க்ஸ்வேகன்

மார்ட்டின் விண்டர்கோர்ன், வோல்க்ஸ்வேகன்

உலக அளவில் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று வோல்க்ஸ்வேகன் என்பது அனைவரும் அறிந்திருப்பர். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திடீரென விலகி அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய அழுத்தம் கொடுத்தார் என்றால் நம்ப முடிகின்றதா?

ஆனால் இவர் விலகியது ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்குப் பொறுப்பேற்றுத்தான். காற்றில் அதிக அளவு நச்சுத்தன்மையைக் கலக்கும் மோனோ நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற காரீயத்தை வோல்க்ஸ்வேகன் கார் வெளியிட்டது.

ஆனால் அதன் அளவைக் குறைத்துக் காட்டுமாறு ஒரு போலியான மென்பொருளை இந்த வாகனத்தில் பொருத்தியிருந்தனர். இந்த ஊழல் வெளியானவுடன் அதற்குப் பொறுப்பேற்று மார்ட்டின் விண்டர்கோர்ன் பதவி விலகினார்.

இவருடைய பதவி விலகலுக்குப் பின் வோல்க்ஸ்வேகன் சிலகாலம் ஆட்டம் கண்டாலும் அதன் பின்னர் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடித்துவிட்டது

 

பெர்னார்ட் எப்பர்ஸ். வோர்ட்ல்காம்

பெர்னார்ட் எப்பர்ஸ். வோர்ட்ல்காம்

வேர்ல்டுகாம் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பெர்னார்ட் எப்பர்ஸ் திடீரெனப் பதவி விலகியதோடு சிறைக்கம்பி எண்ண வேண்டிய நிலையும் இருந்தது.

இவருடைய சொத்து மதிப்பு $1 பில்லியன் டாலர் இருந்தது. ஃபோர்ப்ஸ் தொழிலதிபர்களில் 174 இடத்தைப் பெற்றுப் பெருமை பெற்றவர்.

ஆனால் கடந்த 2002ஆம் ஆண்டு மிகப்பெரிய நிதி முறைகேடு செய்தவர் என்று இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவருக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

உலகத் தொழில்துறை வரலாற்றில் $11 பில்லியன் அளவுக்கு இவர் மூலம் ஊழல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

 

சஞ்சய் குமார், கம்ப்யூட்டர் அசோசியட்ஸ்:
 

சஞ்சய் குமார், கம்ப்யூட்டர் அசோசியட்ஸ்:

இலங்கை தலைநகர் கொழும்புவை சேர்ந்த சஞ்சய்குமார் கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தில் 1987ஆம் ஆண்டு இணைந்து மிகக்குறுகிய காலத்தில் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியைப் பெற்றார்.

பத்து ஆண்டுக் காலம் அவருடைய நிர்வாகத்தில் நிறுவனம் இயங்கி வந்த நிலையில் 2004ஆம் ஆண்டு அவர் மீது மிகப்பெரிய பத்திர மோசடி தொடர்பான குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டது.

பின்னர் இந்த வழக்கில் 2006ஆம் ஆண்டுச் சிறை தண்டனைப் பெற்ற சஞ்சய் இந்த ஆண்டு விடுதலை ஆகிறார்.

 

ராமலிங்க ராஜூ: சத்யம் கம்ப்யூட்டர்

ராமலிங்க ராஜூ: சத்யம் கம்ப்யூட்டர்

சத்யம் கம்ப்யூட்டர் என்ற ஒரு நிறுவனத்தால் இந்திய பங்குச்சந்தை எந்த அளவுக்குச் சரிந்தது என்ற வரலாற்றை யாராலும் மறக்க முடியாது.

சத்யம் கம்ப்யூட்டர் என்ற நிறுவனத்தை 1987ஆம் ஆண்டுத் தொடங்கிய ராமலிங்க ராஜூ சாப்ட்வேர் நிறுவனங்களில் இந்தியாவின் 4வது பெரிய நிறுவனம் என்ற அளவில் தனது நிறுவனத்தைக் கொண்டு வந்தார்.

இவர் தனக்கு இருக்கும் சொத்துக்களின் மதிப்பை விடப் பல மடங்கு சொத்தை கணக்குக் காட்டி அரசிடம் இருந்து ஏகப்பட்ட சலுகைகளைப் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டவுடன் இவரது அனைத்துச் சொத்துக்களும் அரசால் முடக்கப்பட்டது.

இவர் மீது தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. இதனால் சத்யம் கம்ப்யூட்டரின் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது, தற்போது இந்நிறுவனத்தை முழுமையாக மஹிந்திரா குழுமம் கைப்பற்றி டெக் மஹிந்திரா என்ற பெயரில் இயங்கி வருகிறது.

 

ஜான் பிரவுன். பிபி நிறுவனம்:

ஜான் பிரவுன். பிபி நிறுவனம்:

பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்று கூறப்படும் பிபி என்ற நிறுவனம் இவர் தலைமையில் இயங்கி காலத்தைப் பொற்காலம் என்றே கூறுவார்கள்.

பெண்ணாக இருந்து அந்த அளவுக்குத் திறமையாக நிறுவனத்தைக் கொண்டு சென்றார். இவருடைய சீரிய முயற்சியால்தால் இந்த நிறுவனம் அமோகோ நிறுவனம்,, ரஷியன் எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றோடு இணைந்து TNK-BP ஆகியவற்றைத் தொடங்கியது.

ஆனால் இவருக்கு ஒரு ஆண் நண்பர் இருந்தார் என்பதை மறைத்தது இவருக்குக் கெட்ட பெயரைப் பெற்றுத் தந்தது. கடந்த 2007ஆம் ஆண்டு ஜெஃப் செவாலியர் என்பவரோடு தனக்கு உறவு இருந்தது என்றும், அந்த உறவு நீடித்து வருவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதன் காரணமாக இவர் நிறுவனத்தில் நீடிக்க மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியதால் ராஜினாமா செய்து வெளியேறினார்.

 

ரிக் வாகோனார். ஜெனரல் மோட்டார்ஸ்:

ரிக் வாகோனார். ஜெனரல் மோட்டார்ஸ்:

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக இருந்த ரிக் வாகோனாரை கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க அரசு அந்நிறுவனத்தை விட்டு வெளியேற வற்புறுத்தியது. உலகப் பொருளாதாரமாக்கல் கொள்கையின் காரணமாக இவர் பதவி விலக வேண்டும் எனப் பெரும்பாலான ஷேர் ஹோல்டர்கள் வற்புறுத்தியதை அடுத்தும் இவர் பதவி விலகினார்.

கார் உற்பத்தியில் உலக அளவில் ஏற்பட்ட போட்டியை கவனத்தில் கொள்ளாமல், அதிகளவு உற்பத்தி என்ற ஒன்றில் மட்டுமே கவனத்தில் செலுத்தியதால் இந்த நிறுவனம் திவால் ஆகும் அளவுக்குச் சென்றது. ரிக் வாகோனார் இதற்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகினார். இந்நிறுவனம் தன்னுடைய 90% சொத்துக்களை இழந்தது. அதாவது $82 பில்லியன் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

 

பால் ஒட்டேலினி, இண்டெல்:

பால் ஒட்டேலினி, இண்டெல்:

இண்டெல் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆகக் கடந்த 2005ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி பதவியேற்றார். பொறியியல் படிப்பு இல்லாத ஒருவர் சி.இ.ஓ பதவியேற்றது இந்நிறுவனத்தில் இவர்தான் முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு முன்னர் இந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக இருந்த கிரேக் பாரெட் என்பவர் ஒரு மிகப்பெரிய புத்திசாலி. அவருக்குப் பதிலாக இண்டெல் இவரை ஏன் தேர்வு செய்தது என்பதே ஒரு புரியாத புதிர்.

ஆனால் இவருடைய காலத்தில் சுமார் 10500 ஊழியர்கள் பதவியைப் பல்வேறு காரணங்களால் இழந்தனர். நிறுவனத்தின் 10% ஊழியர்கள் திடீரெனப் பதவியை இழந்ததால் நிறுவனம் ஆட்டம் காண ஆரம்பித்தது. கடைசியில் 2013ஆம் ஆண்டு இவர் அந்நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

 

ஜான் ஃபெல்லோஸ் ஏகர்ஸ், ஐபிஎம்

ஜான் ஃபெல்லோஸ் ஏகர்ஸ், ஐபிஎம்

ஐபிஎம் நிறுவனத்தின் சி.இ.ஓவாகக் கடந்த 1986ஆம் ஆண்டுப் பதவியேற்ற ஜான், அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காகப் புதிதாக யோசித்தார். இவர் தன்னிச்சையாக மூன்று கிளை நிறுவனத்தைத் தொடங்கினார்.

டிசைனிங் உள்பட மூன்று வெவ்வேறு கிளைகளைத் தொடங்கிய இவருடைய ஐடியா நடைமுறைக்கு ஒத்து வரவில்லை. நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இவர் எடுத்த நடவடிக்கை நிறுவனத்தை அதளப் பாதாளத்திற்குக் கொண்டு சென்றது.

இதனால் 1991ஆம் ஆண்டு 43000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஐபிஎம்-க்கு ஏற்பட்டது. பின்னர் 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற்ற போர்டு மீட்டிங்கில் இவர் சி.இ.ஓ பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

8 famous business leaders who had controversial exits

8 famous business leaders who had controversial exits
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X