பெய்ஜிங்: உலகிலேயே மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக விளங்கும் சீனாவில், எப்போதும் விற்பனையில் முதல் இடத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தை இரண்டு சீன நிறுவனங்கள் 3ஆம் இடத்திற்குத் தள்ளியுள்ளது.
சீன நிறுவனங்கள்
சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான சியோமி மற்றும் ஹூவாய் நிறுவனங்களின் மொபைல் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதால், ஆப்பிள் மற்றும் சாம்சாங் ஆகிய நிறுவனங்கள் 3வது மற்றும் 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
சியோமி
ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலகட்டத்தில் சீனாவில் சியோமி நிறுவனத்தின் மொபைல் விற்பனை, சந்தையில் 15.9 சதவீதத்தைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
ஹூவாய்
சியோமி நிறுவனத்தைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை 15.7 சதவீதம் உயர்ந்து பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆப்பிள் மற்றும் சாம்சங்
சீனாவில் எப்போதும் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்குத் தனி இடம் உண்டு என்றாலும், அதன் விலை மக்கள் மத்தியில் அதிர்ப்தியை அளிக்கக் கூடிய ஒன்று.
இந்நிலையில் சீன நிறுவனங்கள் சிறந்த ஸ்மார்ட்போன்களைக் குறைவான விலையில் விற்பனை செய்யத் துவங்கியது. எனவே தான் இந்நிறுவனத்தின் விற்பனை சரிந்துள்ளது.
சாம்சங்
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளைத் திருடியதாகச் சாம்சாங் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட பின் இந்நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது.
போட்டி
ஸ்மார்ட்போன் சந்தையில் நிறுவனங்களுக்கு மத்தியில் எப்போதும் இல்லாத அளவிற்குப் போட்டி நிலவுகிறதாகக் கனலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சியோமி
மேலும் சந்தையில் முன்னணி வகிக்கச் சியோமி கடுமையாகப் போராடி வருவதாக இந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..