பெய்ஜிங்: வல்லரசு நாடாக உருமாறி வரும் சீனாவின் பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக மிகவும் மோசமான நிலையை எட்டி வருகிறது. இந்நிலையைச் சமாளிக்கச் சீன அரசு, கடனுக்கான வட்டி விகிதத்தைத் தொடர்ந்து குறைத்துவருகிறது.
நாட்டின் பொருளாதரம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த சீன அரசு கடந்த 6 மாதத்தில் 3 முறை வட்டி வகிதத்தைக் குறைத்துள்ளது.
வங்கிகள்
மக்களுக்குக் கடன் அளிப்பதிலும், கடன் தொகையைத் திருப்பிச் செலுத்திவதிலும் அதிகளவிலான சலுகையை அளிக்கச்சீன அரசு இந்நாட்டு வணிக வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வைப்பு நிதிகளிலும் தக்க வட்டி வகிதத்தை அளிக்க அரசு, வணிக வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வட்டிக் குறைப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனாவின் சென்டரல் வங்கி முன்றாவது முறையாக வட்டி வகிதத்தைக் குறைத்துள்ளது.
சென்டரல் வங்கி
இவ்வங்கி அறிவித்துள்ள இந்த வட்டிக் குறைப்பு, அரசின் ஸ்திரதன்மையை நிலைநாட்டுதல், வேலையில்லை நிலையைமேம்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக அறிவித்துள்ளது.
இந்திய சந்தைக்கு லாபம்
சீனாவின் இந்த நிலை, இந்திய சந்தைக்கு லாபமாக மாறியுள்ளது.
உலக நாடுகள் சீனாவில் செய்யப்படும் முதலீடு அனைத்தும் தற்போது இந்திய சந்தைக்குக் கைமாறியுள்ளது. இதன்காரணமாகவே இந்தியாவில் அன்னிய முதலீட்டு அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.