'ஹெச்-1பி' விசா பிரச்சனையைத் தீர்க்க 'புதிய' திட்டத்துடன் களமிறங்கும் இந்திய ஐடி நிறுவனங்கள்..!

அமெரிக்காவில் நிலவும் விசா கட்டுப்பாடுகள் மற்றும் பிரச்சனைகளை தீர்க்க இந்திய ஐடி நிறுவனங்கள் புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதன் மூலம் அதிகளவிலான பாதிப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம் ஹெச்-1பி விசா வழங்குவதில் அதிகளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது உறுதியான நிலையில், 150 பில்லியன் டாலர் வர்த்தகச் சந்தையைக் கொண்டிருக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள் இப்பிரச்சனையைத் தீர்க்க புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது.

இப்புதிய திட்டத்தின் மூலம் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்காத வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அது சரி, இந்தியாவில் இருந்து ஐடி ஊழியர்கள் அமெரிக்காவிற்குச் செல்லும் வாய்ப்புகள் எப்படி உள்ளது.??

150 பில்லியன் டாலர் சந்தை

150 பில்லியன் டாலர் சந்தை

உலகளாவிய வர்த்தகத்தைக் கொண்டிருக்கும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இந்தியாவைத் தாண்டி மிகப்பெரிய வர்த்தகச் சந்தை கொண்டிருப்பது அமெரிக்கா. அதுமட்டும் அல்லாமல் இச்சந்தையில் செய்யப்படும் வர்த்தகத்தில் அதிகளவிலான லாபமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டொனால்டு டிரப்ம் வெற்றி, விசா கட்டணங்கள் உயர்வு, புதிய கட்டுப்பாடுகள் எனப் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது இந்திய ஐடி நிறுவனங்கள்.

 

புதிய திட்டம்

புதிய திட்டம்

இந்நிலையில் விசா பிரச்சனைகளைத் தீர்க்க இந்திய ஐடி நிறுவனங்கள் அடுத்தச் சில மாதங்களுக்குள் அமெரிக்கச் சந்தையில் இருக்கும் சில நிறுவனங்களை முழுமையாக வாங்கிவிடத் திட்டமிட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் பல முக்கியக் கல்லூரிகளில் இருந்து பட்டதாரிகளை நேரடியாகப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது.

 

 

நிறுவன கைப்பற்றல்..
 

நிறுவன கைப்பற்றல்..

டொனால்டு டிரப்ம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்ததைப் போல், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது 35 சதவீத கார்ப்பரேட் வரி விதிக்கப்படும் என அறிவித்த நிலையில் இனி எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும் இந்திய நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கத் தயங்கும்.

இந்தப் பிரிச்சனையைத் தீர்க்க இந்திய ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ, இன்போசிஸ், எச்சிஎல், மைண்ட்டிரீ ஆகிய நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களை வாங்குவதன் மூலம் அதன் வாயிலாகத் திட்டங்களைப் பெற்ற முடிவு செய்துள்ளது.

 

கேம்பஸ் இண்டர்வியூவ்

கேம்பஸ் இண்டர்வியூவ்

இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் செய்வதைப் போலவே அமெரிக்காவில் கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களை நேரடியாக நிறுவனத்தில் அமர்த்துவதன் மூலம் குறைந்த சம்பளத்தில் வேலைவாய்ப்புகளை அளிக்க முடியும்.

இதற்கு முன் இத்தகைய திட்டத்தில் இந்திய நிறுவனங்கள் ஆர்வம்காட்ட மறுத்தது. காரணம் அப்போது ஹெச்-1பி விசாவில் எவ்விதமான பிரச்சனைகள் இல்லை.

இப்போது அனுபவம் வாய்ந்த பணியாளர்களுக்கு அளிக்கும் சம்பளத்தை விடப் பட்டதாரிகளுக்கு அளிக்கும் சம்பளம் மிகவும் குறைவு. இதனை மையமாக வைத்து இத்திட்டத்தை வகுத்துள்ளது இந்திய ஐடி நிறுவனங்கள்.

 

86,000 விசா

86,000 விசா

2005-14 ஆண்டுகள் வரையிலான காலத்தில் இந்தியர்களுக்குச் சுமார் 86,000 ஹெச்-1பி விசா வழங்கியுள்ளது. இது ஒரு ஆண்டுக்கான மொத்த விசா எண்ணிக்கை.

10 ஆண்டுகளில் ஒரு ஆண்டுக்கு அளிக்கப்பட வேண்டிய அனைத்து விசாவையும் இந்தியா பெற்றுக்கொண்டுள்ளது. இதனைத் தாண்டி எல்-1 விசா கணக்கு தனி.

 

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

மேலும் ஹெச்-1பி மற்றும் எல்-1 விசா வழங்குதல் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனேட்டார் ஜெப் தலைமையிலான கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை புதிய அதிபரான டொனால்டு டிரம்ப் தனது பிரச்சாரக் கூட்டத்தின் துவக்கத்தின் முதல் ஆதரித்து வருகிறார்.

இந்த மசோதா குறித்து முழுமையான தகவல்களைப் பெறக் கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.

 

முழுமையான தடை

முழுமையான தடை

தற்போது அமெரிக்காவில் நிலவி வரும் விசா மற்றும் குடியேற்பு விதிகளில் கட்டுப்பாகள் மூலம் இத்துறையில் இனி திறன்வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு அளிக்கப்படும் விசா முழுமையாகத் தடை செய்யப்படுமா என்ற கேள்விகளும் அமெரிக்கச் சிலிக்கான் வேலி வல்லுனர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்தத் தடையினால் அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதிப்பு தான். காரணம் உலகளவில் மிகவும் குறைந்த செலவுகளில் மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப சேவை அளிப்பது இந்திய நிறுவனங்கள் தான். இந்தப் பாதிப்பால் தங்களின் வர்த்தகமும் பாதிக்குமாக என்ற கேள்வி அமெரிக்க நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

 

 இன்போசிஸ்

இன்போசிஸ்

இந்தப் பிரச்சனைகளைக் கட்டுக்குள் கொண்டு வர தற்போது இன்போசஸ் நிறுவனம் அதிகளவில் அமெரிக்க வாழ் குடிமக்களைப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது என இன்போசிஸ் ராவ் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் படி ஒவ்வொரு காலாண்டிலும் 500-700 பட்டதாரிகளை (Freshers) தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாட்களில் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளோம். இதன் படி 80 சதவீத ஊழியர்கள் அந்நாட்டு மக்களாகவே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

2 பில்லியன் டாலர் முதலீடு

2 பில்லியன் டாலர் முதலீடு

இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த 5 வருடங்களில் மட்டும் சுமார் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இதில் மேற்கு அமெரிக்காவில் பாதிக்கும் அதிகமான தொகை முதலீடு செய்துள்ளது.

தற்போதைய நிலையில் கூடுதல் முதலீடுடன் அமெரிக்காவில் புதிய நிறுவனங்களைக் கைப்பற்றுவதன் மூலம் தனது வர்த்தகத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இந்திய ஐடி நிறுவனங்கள் பார்த்துக்கொள்ளும் என்பது உறுதி.

 

அதிக ஊழியர்கள் மற்றும் புதிய டெக்னாலஜி

அதிக ஊழியர்கள் மற்றும் புதிய டெக்னாலஜி

தற்போதைய நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை ஆப்சோரில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆட்டோமேஷ்ன், கிளவுட் கம்பியூடிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை வழங்க முடிவு செய்துள்ளது.

இத்தகைய மாற்றம் மேற்கத்திய நாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அமெரிக்காவில் புதிய மசோதா

அமெரிக்காவில் புதிய மசோதா

அமெரிக்காவில் 2 செனேட்டர்கள் ஹெச்-1பி விசாவை இனி ஊதிய அடிப்படையிலான அமைப்பில் மட்டுமே வழங்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர். இதற்கான ஒப்புதல்களை நெல்சன் மற்றும் ஜெஃப் தலைமையிலான ஆலோசனை கூட்டம் அளித்து.

இந்த மசோவின் பாதிப்பு என்ன..?

 

வருடத்திற்கு 85,000 விசா

வருடத்திற்கு 85,000 விசா

ஒவ்வொரு வருடமும் அமெரிக்க அரசு 65,000 பொதுவான ஹெச்-1பி விசாக்காளையும், 20,000 விசாக்களை அறிவியல், தொழில்நுட்ப, என்ஜினியரிங் மற்றும் கணித பட்டதாரிகளுக்கு அளித்து வருகிறது. ஆக மொத்தம் சுமார் 85,000 விசாக்களை அமெரிக்க அரசு உலக நாட்டு மக்களுக்கு அளித்து வருகிறது.

பாதிப்பு..

பாதிப்பு..

அமெரிக்க நாடாளுமன்றத்தில் சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் அளிக்கப்பட்ட மனுவின் படி 85,000 விசாக்களில் முதல் 15,000 விசாக்களை அதிகச் சம்பளம் வாங்குவோருக்கு மட்டும் அளிக்க வேண்டும் எனவும், மீதமுள்ள 70,000 விசாக்களையும் அதிக ஊதிய அடிப்படையில் வழங்க வேண்டும் எனச் செனேட்டார்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

செக்

செக்

இத்தகைய முறையின் மூலம் அதிகச் சம்பளம் வாங்குவோருக்கு எளிதாக அமெரிக்க ஹெச்-1பி விசா கிடைப்பது மட்டும் அல்லாமல், அவுட்சோர்சிங் நிறுவனங்களால் குறைவான சம்பளம் பெறும் ஊழியர்களை, அமெரிக்க நிறுவனங்களில் நியமிக்க முடியாது.

மேலும் அமெரிக்கா வரும் பிற நாட்டவர்களுக்கு அமெரிக்கக் குடிமக்களுக்கு இணையான சம்பளத்தைப் பெறுவார்கள் எனவும் இந்த மனு விவரிக்கிறது.

 

விசா கட்டணம்

விசா கட்டணம்

உயர்வு அமெரிக்கக் காங்கிரஸ் அளித்த மனுவின் படி ஹெச்-1பி விசா கட்டணத்தை 4,000 டாலராகவும், எல்-1 விசாவிற்கான கட்டணத்தை 4,500 டாலராகவும் உயர்ந்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

ஹெச்-1பி விசா பெற தடை..!

ஹெச்-1பி விசா பெற தடை..!

<strong>ஹெச்-1பி விசா பெற 20 நிறுவனங்களுக்குத் தடை.. அமெரிக்க அரசு அதிரடி..!</strong>ஹெச்-1பி விசா பெற 20 நிறுவனங்களுக்குத் தடை.. அமெரிக்க அரசு அதிரடி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fearing US visa regime, Indian IT firms into new plan

Fearing US visa regime, Indian IT firms into new plan - Tamil goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X