தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் வேலை செய்ய பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று ஊழியர்களை அந்த நிறுவனம் எப்படி கவனித்துக் கொள்கிறது என்பதைப் பொறுத்ததாகும்.
லாண்ட்ரி, விளையாட்டு மைதானங்கள் எனப் பல வசதிகளை அளிக்கும் கூகுள் நிறுவனத்தில் ஊழியர்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று இங்குப் பார்ப்போம்.
மகிழ்ச்சியான ஊழியர்கள்
ஊழியர்களை உற்சாகப்படுத்துவதினால் 12 சதவீதம் வரை உற்பத்தி அதிகரிக்கும் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது, மேலும் இப்படி நிறுவனம் செய்து வருவது ஊழியர்களை மேலும் சிறப்பாக வேலை பார்க்க ஊக்குவிக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுள்
ஆய்வாளர்களின் அறிக்கைப் படி கூகுள் நிறுவனம் அவர்களது ஊழியர்களை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்துக்கொள்ள ஊக்கத்தொகை, இலவச உணவு, பேருந்து, உடற்பயிற்சி நிலையம், விளையாட்டு மைதானம் போன்றவற்றை அலுவலகத்தின் மாடிகளிலேயே வைத்துள்ளது.
ஊழியர்களைப் பற்றி தெரிந்து வைத்துக்கொள்ளுதல்
ஆய்வின் முடிவில் மகிழ்ச்சியாக உள்ள ஊழியர்கள் அனைவரும் 12 சதவீதம் வரை உற்பத்தியை அதிகமாகக் கொடுத்து இருக்கிறார்கள்.
700 ஊழியர்களிடம் இருந்து நான்கு பிரிவுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது நகைச்சுவை படங்கள், இலவச காபி, பாணங்கள், பழங்கள் போன்றவை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.
இன்னும் சிலர் அன்மையில் நடந்த குடும்ப பிரச்சனைக்குப் பிறகு அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகச் செல்கிறதா எனவும் அதனால் ஏதேனும் பணியில் பாதிப்பு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
ஊழியர்களின் மனநிறைவு அதிகரித்தல்
கூகுள் போன்ற பெரிய நிறுவனங்கள் ஊழியர்களின் நலனுக்காக மற்றும் அவர்களின் மனநிறைவுக்காகவும் நிறைய முதலீடு செய்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: உங்களை வெறுக்கும் சக ஊழியர்களை வெற்றி பெற உதவும் முத்தான 10 குறிப்புகள்..!