ஏதென்ஸ்: மிகப்பெரிய நிதிநெக்கடியில் தவித்து வந்த கிரீஸ் நாட்டை, மக்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு, ஐரோப்பிய தலைவர்களுடன் போராடி நிதியுதவி பெற்ற இந்நாட்டின் முன்னாள் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் 35.47 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார்.
அலெக்சிஸ் சிப்ரஸ்
பொருளாதாரம் மற்றும் நிதிநெக்கடியில் கிரீஸ் தவித்து வந்த நிலையில், இந்நாட்டின் நிதிநிலை மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த ஐரோப்பிய கூட்டணி நாடுகளிடம் போராடி பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின் நிதியுதவியைப் பெற்றார் அலெக்சிஸ் சிப்ரஸ்.
பதவி ராஜினாமா
நிதியுதவியைக் கொண்டு நாட்டை இயல்பு நிலைக்குத் திரும்பிய உடன், எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி மற்றும் ஐரோப்பிய நாட்டுகள் மத்தியில் நிலவிய பிரச்சனைகளுக்காக அலெக்சிஸ் சிப்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
2வது முறையாகத் தேர்தல்..
இதனால் 2015ஆம் ஆண்டில் கிரீஸ் நாட்டு மக்கள் இரண்டாவது முறையாகப் பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை உருவானது. ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல் வாக்குப்பதிவில் காலை முதல் மாலை வரை கிரீஸ் மக்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவுகள் செய்து வந்தனர்.
35.47 சதவீத வாக்குகள்
திங்கட்கிழமை நடந்த வாக்கு எண்ணிக்கையில் சிரிசா கட்சியின் தலைவரான அலெக்சிஸ் சிப்ரஸ் 35.47 சதவீத வாக்குகளைப் பெற்றும் முன்னிலை வகிக்கிறது.
கிரீஸ் நாடாளுமன்றம்
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயகம் கட்சி 28.09 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இதனால் கிரீஸ் நாடாளுமன்றத்தில் சிப்ரஸ் அவர்களின் கட்சி 300 சீட்டுகளில் சுமார் 145 சீட்டுகளைப் பிடித்துள்ளது.
இடைக்கால பிரதமர்
சிப்ரஸ் ராஜினாமா செய்தி பின் தேர்தல் காலகட்டத்தின் வரை கிரீஸ் நாட்டின் இடைக்கால பிரதமராக இந்நாட்டின் அமைச்சர் Vassiliki Thanou நியமிக்கப்பட்டார். இவருக்கு வயது 65.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..