ஏதென்ஸ்: ஜூலை 5ஆம் தேதி கிரீஸ் நாட்டிற்கு நிதியுதவி அளிப்பதற்காகச் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதாகக் கிரீஸ் நாட்டின் பிரதமர் அலெக்ஸா சிப்ரஸ் சனிக்கிழமை அறிவித்தார்.
மேலும் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட கிரீஸ் பிணைஎடுப்பு (Bailout) வருகிற ஜுன் 30ஆம் தேதி முடிய உள்ள நிலையில் இம்மாத இறுதிக்குள் 1.6 பில்லியன் யூரோ ஐஎம்எப்-க்கு செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது கிரீஸ்.
இக்காலக்கெடுக்குள் குறிப்பிட்ட தொகை செலுத்தாவிட்டால், கிரீஸ் திவாலாக அறிவிக்கப்படும். இதற்கான முடிவுகள் இதுவரை அறிவிப்படாத நிலையில் உள்ளது. 1.6 பில்லியன் யூரோ நிதியுதவிக்குறித்து வரும் திங்கட்கிழமை இறுதி முடிவு வெளியாகும் எனத் தெரிகிறது.
இதற்காகக் கடந்த 5 மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
கிரீஸ் அளித்துள்ள புதிய திட்டம் சர்வதேச முதலீட்டாளர்கள், ஐரோப்பிய வங்கி, ஐரோப்பிய கவுன்சில் ஆகியவை முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவை வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டால் கிரீஸ் 15.5 பில்லியன் யூரோ நிதியுதவியாகப் பெறும்.