கிரீஸ் நாட்டிற்கான நிதியுதவி வாக்கெடுப்பில் முடிவாகும்: அலெக்ஸா சிப்ரஸ்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏதென்ஸ்: ஜூலை 5ஆம் தேதி கிரீஸ் நாட்டிற்கு நிதியுதவி அளிப்பதற்காகச் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதாகக் கிரீஸ் நாட்டின் பிரதமர் அலெக்ஸா சிப்ரஸ் சனிக்கிழமை அறிவித்தார்.

 

மேலும் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட கிரீஸ் பிணைஎடுப்பு (Bailout) வருகிற ஜுன் 30ஆம் தேதி முடிய உள்ள நிலையில் இம்மாத இறுதிக்குள் 1.6 பில்லியன் யூரோ ஐஎம்எப்-க்கு செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது கிரீஸ்.

 
கிரீஸ் நாட்டிற்கான நிதியுதவி வாக்கெடுப்பில் முடிவாகும்: அலெக்ஸா சிப்ரஸ்

இக்காலக்கெடுக்குள் குறிப்பிட்ட தொகை செலுத்தாவிட்டால், கிரீஸ் திவாலாக அறிவிக்கப்படும். இதற்கான முடிவுகள் இதுவரை அறிவிப்படாத நிலையில் உள்ளது. 1.6 பில்லியன் யூரோ நிதியுதவிக்குறித்து வரும் திங்கட்கிழமை இறுதி முடிவு வெளியாகும் எனத் தெரிகிறது.

இதற்காகக் கடந்த 5 மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

கிரீஸ் அளித்துள்ள புதிய திட்டம் சர்வதேச முதலீட்டாளர்கள், ஐரோப்பிய வங்கி, ஐரோப்பிய கவுன்சில் ஆகியவை முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவை வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டால் கிரீஸ் 15.5 பில்லியன் யூரோ நிதியுதவியாகப் பெறும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Greece to hold referendum on debt deal

Greek Prime Minister Alexia Tsipras on Saturday said the country will hold a referendum on July 5 on the latest debt deal proposed by its international creditors.
Story first published: Saturday, June 27, 2015, 15:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X