டெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில் விமான சரக்கு போக்குவரத்திற்கு அதிக வாய்ப்புடைய நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளதாக IATA கணித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு இதே அமைப்பு அடுத்த 10 வருடத்தில் உலகளவில் விமான பயணிகளின் அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் இருக்கும் என்று தனது கணிப்புகளை வெளியிட்டது.
மேலும் இந்தியா விமான சரக்கு போக்குவரத்தில் இன்னும் சரி வர வளராத காரணத்தினால் இதன் வளர்ச்சியில் தடைப்பட்டு இருப்பதாகவும், அடுத்த 5 வருடத்தில் இந்தியாவில் இத்துறையின் வளர்ச்சி 7 சதவீதம் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
டாப் 10
மேலும் 2018ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய விமான சரக்கு போக்குவரத்தில் இந்தியா முக்கிய இடத்தை பெறும். தற்போது இத்துறையில் முதல் இடத்தில் அமெர்க்கா உள்ளது. வருடத்திற்கு 10,054,000 டன் சரக்குகளை அமெரிக்கா விநியோகம் செய்து வருகிறது. அமெரிக்காவை தொடர்ந்து சீனா 5,639,000 டன் சரக்கு விமானங்களை கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தியா
அமெரிக்கா மற்றும் சீனா முதல் இரண்டு இடங்களில் இருக்கும் போது இந்தியா 6.8 சதவீத வளர்ச்சி சாத்தியகூறுகளுடன் 622,000 டன் சரக்குகளை விநியோகம் அதிகரித்துள்ளது.
பிற நாடுகள்
அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து டாப் 10 இடங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (4,974,000 டன்), ஜெர்மனி (4,763,000 டன்), ஹாங்காங் (4,648,000 டன்), கொரிய குடியரசு (3,487,000 டன்), ஜப்பான் (3,480,000 டன்), பிரிட்டன் (2,808,000 டன்), தைப்பே (2,350,000 டன்) மற்றும் இந்தியா (2,223,000 டன்).
விமான போக்குவரத்து
இந்தியாவில் வான்வழி பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அடுத்த 10 வருடங்களில் மிகவும் சிறப்பாக இருக்கும் என் கணிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு புதிய விமான நிலையங்களை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது.