கத்தாருக்கு அதிநவீன எப்-15 போர் விமானத்தை விற்கும் அமெரிக்கா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கத்தார் நாட்டிற்கும் வளைகுடா நாடுகளுக்கும் எதிர்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பிரிவினையை மேலும் பெரிதாக்கும் வகையில் அமெரிக்கா அதிநவீன எப்-15 போர் விமானத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த விற்பனையின் மதிப்பு 12 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திப்பு

சந்திப்பு

எப்-15 போர் விமானத்தின் விற்பனை குறித்து இறுதி ஒப்பந்தம் முடிவுகளை எடுக்கப் புதன்கிழமை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டீஸ் கத்தார் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராஔன கலிந் அல் அத்தியா-வை சந்தித்துள்ளார்.

நட்பு

நட்பு

12 பில்லியன் டாலர் மதிப்புள்ள போர் விமானங்களை விற்பனை செய்வதன் மூலம் கத்தார் நாட்டின் பாதுகாப்பு உயர்வது மட்டும் அல்லாமல், அமெரிக்கா - கத்தார மத்தியிலான நட்பு மேன்மை அடையும் எனப் பென்டகன் செய்தி தொடர்பாளர், ரோஜர் கேபின்ஸ் தெரிவித்தார்.

பாதுகாப்பு பங்கீடு
 

பாதுகாப்பு பங்கீடு

மேலும் இரு நாட்டு அமைச்சர்களும், பாதுகாப்பு சார்ந்த உதவிகளின் பங்கீடு, ஐஎஸ் தீவிரவாதத்தை ஒடுக்குதல், வளைகுடா நாடுகள் மத்தியில் நிலவும் பதற்றமான நிலையைச் சரிசெய்தல் ஆகியவற்றைப் பற்றிப் பேசினர். இதுகுறித்த ஆலோசனைகள் அடுத்தச் சந்திப்பில் இன்னும் விரிவான முறையில் நடத்த உள்ளது அமெரிக்கா.

துண்டிப்பு

துண்டிப்பு

காத்தார் நாட்டுடனான நட்புறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு நாடுகள் மற்றம் எகிப்த் நாடுகள் துண்டித்தபின், வெறும் 3 வாரங்களில் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான அதிநவீன போர் விமானங்களைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது கத்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US agrees $12 billion jet deal with Qatar

US agrees $12 billion jet deal with Qatar
Story first published: Thursday, June 15, 2017, 17:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X