ஆகஸ்ட் 1-ஆம் தேதி அன்று எண்ணெய் நிறுவனங்கள் கமர்சியல் சிலிண்டரின் விலையை அதிகரித்தன. இப்படி நாளுக்கு நாள் சிலிண்டர் விலை அதிகரித்து வருவதால் 5 கிலோ எடை கொண்ட குட்டி சிலிண்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள், பணிக்காக வெளியூர் சென்றவர்கள், வாடகை வீட்டில் வசித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினர் போன்றோருக்கு இந்த சிலிண்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 5 கிலோ சிலிண்டரை வாங்க பெரிதாக ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. ஒரு சில நிமிடங்களிலேயே உங்களுடைய அடையாள ஆவணத்தை பயன்படுத்தி வாங்கலாம்.
குட்டி சிலிண்டரை எப்படி வாங்குவது?: உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பாரத் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டரை அணுகி பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வழங்கினால் போதுமானது. இந்த குட்டி சிலிண்டரை பெறுவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் செலுத்த வேண்டும். அதை செலுத்தி உடனடியாக இந்த சிலிண்டரை பெறலாம். வெளியில் சென்று வாங்க முடியாதவர்கள்.. பாரத் கேஸ்-இன் கட்டணமில்லா டோல் ஃப்ரீ நம்பரான 1800 22 4344 என்ற நம்பரை அழைத்தும் விண்ணப்பிக்கலாம்.
ஹெச்பி மற்றும் இன்டேன் கேஸ் சிலிண்டரை வாங்குவதற்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்க், சில்லறை விற்பனை நிலையங்கள் போன்றவற்றுக்கு செல்லலாம். அங்கும் ஆதார் கார்டு அல்லது பான் கார்டு போன்ற அடையாள ஆவணத்தை வழங்க வேண்டும். நிறுவனத்தின் HP Pay ஆப், அதிகாரப்பூர்வ இணையதளம், மிஸ்டு கால் போன்ற வசதியை பயன்படுத்தி மீண்டும் ரீஃபில் செய்து கொள்ளலாம்.
ரூ.9999, ரூ.999.. உண்மையில் எதற்காக இத்தகைய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது தெரியுமா?
எவ்வளவு செலவாகும்?: ஒருவர் முதல் முதல் முறையாக 5 கிலோ குட்டி சிலிண்டரை வாங்கினால் சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டர் அனைத்தையும் சேர்த்து ரூ. 1400 முதல் ரூ. 1500 வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். அதோடு செக்யூரிட்டி டெபாசிட்டும் சேர்த்து செய்ய வேண்டும். இந்த தொகை நீங்கள் கேஸ் வாங்கும் ஏஜென்சியை பொறுத்து ரூ. 1100 முதல் ரூ. 1200 வரை இருக்கும்.
ஒருவேளை உங்கள் பகுதியில் 14 கிலோ எடை கொண்ட டொமெஸ்டிக் சிலிண்டர் கிடைத்தால் நீங்கள் இந்த 5 கிலோ குட்டி சிலிண்டரை வாங்கிய இடத்திலேயே ஒப்படைக்கலாம். அப்படி ஒப்படைக்கும் போது இந்த செக்யூரிட்டி டெபாசிட்டை நிறுவனம் உங்களுக்கு வழங்கி விடும்.
5 கிலோ சிலிண்டர் தீர்ந்தவுடன் அதற்கு ரூ. 750 முதல் ரூ. 900 வரை நீங்கள் வசிக்கும் நகரத்தைப் பொறுத்து செலவு செய்து ரீஃபில் செய்து கொள்ளலாம். இந்த சிலிண்டர் எல்லோருக்கும் ஏற்றது என சொல்லிவிட முடியாது. அதிக நபர்களுக்கு தினசரி அடிப்படையில் சமைப்பவர்களுக்கு இந்த சிலிண்டர் போதாது . குறைந்த அளவு எரிவாயு தேவைப்படுபவர்கள் எளிதில் இதை வாங்கி பயன்படுத்தலாம். அமெரிக்க ஈரான் பிரச்சனைக்கு பிறகு மக்கள் இந்த மினி சிலிண்டரை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
More Articles
- LPG: ஆகஸ்ட் 1 முதல் கேஸ் விதிகளில் வரப்போகும் மாற்றங்கள்! இது ரொம்ப முக்கியம்!
- LPG கேஸ் சிலிண்டருக்கு குட்பை..!! விரைவில் பெரிய மாற்றத்தை கொண்டு வர தயாராகும் மத்திய அரசு..!!
- கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்
- சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!
- வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?
- இஸ்ரேல் - ஈரான் பதற்றம்.. எண்ணெய் விலை அதிகரிப்பால் இந்தியாவில் இயற்கை எரிவாயு விலை 5% உயர்வு..!!