இந்தியாவில் இருக்கும் 7 அணுமின் நிலையத்தில் மிகப்பெரிய மற்றும் முக்கியமான அணு உலையாக இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டிய ப்ளூ பிரிண்ட், சப்ளையர் விபரங்கள் அடங்கிய பலதரப்பட்ட ஆவணங்கள் அனில் அம்பானி-க்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து சைபர் அட்டாக் மூலம் திருடப்பட்டு Ransomware group-ன் World Leaks என்ற சைபர் கிரிமினல் குரூப் டார்க் வெப்-ல் லீக் செய்துள்ளது.

Advertisement

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் அணுமின் நிலையத்தை மிகப்பெரிய அளவில் பயன்படுத்த திட்டமிட்டு வரும் வேளையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய ஆவணங்கள் லீக் ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

எந்த ஆவணங்கள், எப்படி லீக் ஆனது..? முழு விபரத்தை இப்போது பார்ப்போம்.

எந்த ஆவணங்கள் லீக் ஆனது..?

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வென்டிலேஷன் அமைப்பின் ப்ளூபிரின்ட், கன்ட்ரோல் ரூம்-ன் ப்ளோர் லேஅவுட், சப்ளையர்கள் விபரம், சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சப்ளையர்களின் விண்ணப்பங்கள், இதோடு ரிலையன்ஸ் மற்றும் அணுமின் நிலைய நிர்வாகத்தின் கூட்டு ஆய்வு முடிவுகளின் ஆவணங்கள், முதல் பல முக்கிய ஆணவங்கள் World Leaks அமைப்பு வெளியிட்டுள்ளது.

Ransomware group வெளியிட்டுள்ள 8.58 லட்சம் ஆவணங்கள் அடங்கிய பைல்களில் சுமார் 19000 ஆவணங்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை தொடர்புடையது. இந்த ஆவணங்களை அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குரூப்-ல் இருந்து சைபர் அட்டாக் வாயிலாக திருடப்பட்டதாக World Leaks அமைப்பு தெரிவித்து.

Advertisement

எப்படி ரிவையன்ஸ் குரூப்-க்கு இந்த ஆவணங்கள் கிடைத்தது?

2018ல் அனில் அம்பானி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரிலையன்ஸ் இன்பராஸ்டக்சர் கூடம்குளம் அணுமின் நிலையத்தின் யூனிட் 3 மற்றும் 4ன் சப்போர்ட் இன்பராஸ்டக்சர் கட்டுவதற்கான ஒப்பந்தம் கைப்பற்றியது. இதற்காக அணுமின் நிலையத்தின் கட்டமைப்புகள் தொடர்பான ஆவணங்கள் பகிரப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டியது அனில் அம்பானி-யின் ரிலையன்ஸ் இன்பராஸ்டக்சர்-ன் கடமை.

எப்படி லீக் ஆனது?

ரிலையன்ஸ் நிறுவனம் யோட்டா டேட்டா சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சர்வர் உதவியுடன் தனது டேட்டாவை நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் மே 29ஆம் தேதி தனது சர்வர் அமைப்பில் முறையற்ற நடைமுமுறையை கண்டதாக அறிவித்தது, ஜூன் மாத இறுதியில் ரிலையன்ஸ் தனது தரவுகள் திருடப்பட்டதாக அறிவித்தது.

Advertisement

ஆனால் ரிலையன்ஸ் சைபர் அட்டாக் மூலம் சிறிய அளவிலான தகவல் திருட்டு மட்டுமே நடைபெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

அச்சம்

இந்த தகவல் திருட்டு மூலம் கூடம்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும். இந்த தகவல் திருட்டு அணுமின் நிலையத்தை அனுக வழியை காட்டியது மட்டும் அல்லாமல் எப்படி அனுக முடியும் என்பதையும் காட்டியுள்ளது என நியூக்ளியர் திரெட் இனிஷியேட்டிவ் அமைப்பை சேர்ந்த நிகோலஸ் ராத் தெரிவித்துள்ளார்.

டாடா குழுமத்தில் அட்டாக்..

World Leaks இந்திய நிறுவனங்களை டார்கெட் செய்வது இது முதல் முறையல்ல, ஜூன் மாதம் டாடா குழுமத்தில் சைபர் அட்டாக் செய்து ஆப்பிள், டெஸ்லா நிறுவனங்களின் டிசைன் ஆவணங்களை திருடியது, இதற்கு டாடா குழுமத்தின் World Leaks சுமார் 1.5 மில்லியன் டாலர் அளவிலான தொகையை கேட்டது, ஆனால் டாடா இந்த மிரட்டலை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டது.

Advertisement

இந்த சைபர் அட்டாக் தொடர்பாக NPCIL அமைப்பு ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்துடன் பேசி விபரங்களை சேகரித்து வருகிறது. மேலும் மத்திய அரசின் சைபர் செக்யூரிட்டி அமைப்பான CERT-In நிறுவனமும் ஆய்வு செய்து வருகிறது.