பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தில் மிகவும் முக்கியமானதாக வெள்ளிக்கிழமை நியூசிலாந்து நாட்டிற்கு சென்றார், இந்தியர்களுக்கு குறிப்பாக படித்த இளைஞர்களுக்கு நியூசிலாந்து தற்போது குட்டி அமெரிக்காவாக பார்க்கப்படுகிறது. அந்நாட்டில் டெக் துறையில் வளர்ச்சி அதிகவேகமாக இருக்கும் காரணத்தால் பல இந்தியர்கள் தற்போது நியூசிலாந்துக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் மோடியின் இந்த பயணம் இரு நாடுகளுக்கு மத்தியிலான வர்த்தகம் ஒப்பந்தம் எட்டும் முயற்சிக்கு முக்கியமான அடித்தளம் அமைக்க வழிவகுத்துள்ளது.

Advertisement

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மோடியும் நியூசிலாந்து அதிபர் கிறிஸ்டோபர் லக்சனும் சந்தித்து பேசினர், இந்த சந்திப்பின் இறுதியில் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் வரையில் வர்த்தகத்தை 7 பில்லியன் நியூசிலாந்து டாலர் வரையில் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின் படி இது 35000 கோடி ரூபாயாகும்.

கடந்த 40 ஆண்டுகளில் நியூசி. நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமராக மோடி திகழ்கிறார், மேலும் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சந்திப்பு மூலம் இருதரப்புபு உறுவுகள் புதிய நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்த இக்கூட்டம் மூலம் நீண்ட கால கூட்டணி உருவாகி India-New Zealand Strategic Partnership: Roadmap to 2030 திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இரு நாடுகள் மத்தியிலான இருதரப்பு ஒப்பந்தம் அடுத்த 4 ஆண்டுகளில் கையெழுத்தாகும் வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா இந்த ஆண்டு நியூசிலாந்து உடன் ப்ரீ டிரேட் ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்பு, முக்கிய கட்டமாக ரோடுமேப் டூ 2030 ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.