ஒவ்வொரு நிறுவனமும் தனது வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் அதன் சிஇஓவுக்கும், உயர் தலைவர்களுக்கும் சம்பளத்தை அள்ளிக்கொடுப்பது வழக்கம். இப்படி கொடுக்கப்பட்டும் சம்பளத்தில் யார் அதிகப்படியான சம்பளம் பெறுகிறார்கள் என்பதில் எப்போதும் அறிவிக்கப்படாத போட்டி இருந்துக்கொண்டே இருக்கிறது.

Advertisement

இந்த வகையில் கடந்த வாரம் ஹெச்சிஎல் கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்நிறுவனத்தின் சிஇஓ சி.விஜயகுமார் 2026ஆம் நிதியாண்டுக்கான சம்பளமாக ஒரு நாளுக்கு 48.49 லட்சம் ரூபாய் அடிப்படையில் வருடத்திற்கு 177 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என அறிவித்தது. இதன் மூலம் இந்திய ஐடி சேவை துறையில் அதிகம் சம்பளம் வாங்கும் நபராக விஜயகுமார் திகழ்கிறார்.

Advertisement

நேற்று டாடா குழுமத்தின் தலைவர் டாடா சன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் இதன் சேர்மன் என்.சந்திசேகரன் 2026ஆம் நிதியாண்டுக்கு சுமார் 158.6 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தை பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டது. இது விஜயகுமாரின் சம்பளத்தை விட 18.4 கோடி ரூபாய் குறைவாகும்.

சந்திரசேகரன் பெற்றுள்ள 158.6 கோடி ரூபாயில் சுமார் 140.7 கோடி ரூபாய் கமிஷனாக மட்டுமே கிடைத்துள்ளது, மீதமுள்ள 17.9 கோடி ரூபாய் மட்டுமே அவருடைய அடிப்படை சம்பளமாகும்.

டாடா சன்ஸ் நிர்வாகம் 2022ஆம் நிதியாண்டுக்கு முன்பு அதன் சேர்மன் சம்பளத்தை வெளியிட்டது கிடையாது, அப்படி பார்த்தால் இதுதான் அதிகப்படியான சம்பளமாகும். 2024ஆம் நிதியாண்டில் 134.8 கோடி ரூபாய் சம்பளத்தை பெற்றார் சந்திரசேகரன்.

Advertisement
நோயல் டாடாவுக்கு 'லாபத்தால்' பதிலடி கொடுத்த சந்திரசேகரன்.. டாடா குழுமத்தின் அடுத்த பெரிய மாற்றம்!

இப்படி கடந்த 5 வருடத்தில் மொத்தம் 685 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தை பெற்றுள்ளார், இதன் மூலம் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 37.53 லட்சம் ரூபாய் அளவிலான சம்பளத்தை சந்திரசேகரன் பெற்றுள்ளார்.

இந்திய ஐடி துறையில் முதல்முறையாக இப்படி விஷயம்.. HCL எடுத்த 'அந்த' ஒரு முடிவு..!

சந்திரசேகரன், விஜயகுமார் ஆகியோரை தாண்டி 2026ஆம் நிதியாண்டில் அதிகம் சம்பளம் வாங்கிய நபர்களில் Persistent Systems நிறுவனத்தின் சிஇஓ சந்தீப் கார்லா 148 கோடி ரூபாய் சம்பளத்தை பெற்றுள்ளார். ஹீரோ நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் 122 கோடி ரூபாய் சம்பளத்தை பெற்று ஆட்டோமொபைல் துறையில் அதிகம் சம்பளம் வாங்கும் நபராக உள்ளார்.

Advertisement

இதேவேளையில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான சௌரப் அகர்வால் 2026ஆம் நிதியாண்டுக்கு 34 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.