உலகளவில் தற்போது பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது, ஒருப்பக்கம் ஏஐ, டேட்டா சென்டர் போன்றவை பெரிய அளவில் முக்கியதுவம் பெற்றாலும்.. மறுமுனையில் இன்னும் கணிதம், இயற்பியல் போன்ற அறிவியலில் அதி திறன் வாய்ந்த மக்களுக்கு டிமாண்ட் பெரிய அளவில் உருவாக்கியுள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் வெறும் 2 மாத இன்டர்ஷிப்-க்கு 57 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கும் ஒரு பணி தான் தற்போது இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
Graviton Research Capital என்னும் குவான்டிடேட்டிவ் டிரேடிங் நிறுவனம் கணிதம், ப்ரோகிராமர்ஸ் மற்றும் குவான்டிடேட்டிவ் ஆராய்ச்சியாளர்களை தேடி வருகிறது. இதற்காக இப்பிரிவில் திறன்வாய்ந்த இன்ஜினியர்களுக்கு 2 மாதம் இன்டர்ஷிப் கொடுக்க உள்ளது.
இந்த 2 மாத பணிக்கு சுமார் 57 லட்சம் சம்பளம் கொடுப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது மாதம் 28.5 லட்சம் வரையிலான சம்பளம் கொடுக்கிறது, இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளத்துடன் இண்டர்ஷிப் கொடுக்கும் நிறுவனமாக Graviton Research Capital உருவெடுத்துள்ளது.
இதற்கு முன்பு குவான்டிடேட்டிவ் டிரேடிங் நிறுவனம் என்றால் என்ன என்பது புரிந்தால் மட்டுமே எதற்காக இத்தகைய பெரும் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பது உங்களுக்கு புரியும். கணித மாடல்கள், கம்பியூட்டர் அல்காரிதம், பெரிய அளவிலான தரவுகள் அடிப்படையில் ஒரு பங்கை வாங்கலாமா.. வேண்டாமா.. எப்போது வாங்க வேண்டும்.. எப்போது விற்க வேண்டும்.. ஒவ்வொரு வர்த்தகத்தில் அதிகப்படியான லாபத்தை பெறுவது எப்படி.. போன்ற அனைத்து விஷயங்களையும் நொடி பொழுதில் கணிக்கும் தளத்தை உருவாக்கி அதன் மூலம் முதலீடு செய்தும் நிறுவனம் தான் இந்த குவான்டிடேட்டிவ் டிரேடிங் நிறுவனம்.
பொதுவாக ப்ரோகரேஜ் நிறுவனங்களில் பணியாற்றம் மக்கள் 30-50 வரையில் காரணிகளையும், சந்தை நிலவரம், சந்தை மாற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்து முதலீட்டு முடிவுகளை எடிப்பார்கள் ஆனால் குவான்டிடேட்டிவ் டிரேடிங் நிறுவனங்கள் ஒவ்வொரு டீலையும் 10000- 1 லட்சம் பாராமீட்டர்களை வைத்து ஆய்வு செய்து முதலீட்டு முடிவுகளை எடுப்பார்கள்.
இத்தகைய பணியை செய்ய கணிதம், சாப்ட்வேர் ப்ரோகிராம் தெரிந்த குவான்டிடேட்டிவ் ஆராய்ச்சியாளர்கள் தேவை. இத்தகைய திறன் காம்பினேஷன் உடன் கிடைப்பது மிகவும் அரிது என்பதாலேயே இத்தகைய அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.
Graviton நிறுவனத்தில் இந்த இன்டர்ஷிப்-க்கு தேர்வு செய்யப்படுபவர்கள், தற்போது அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உடன் இணைந்து லைவ் டிரேடிங் தளத்தில் உடனுக்குடன் கிடைக்கும் தகவலை வைத்து ஆய்வு செய்து முதலீட்டு முறையை மேம்படுத்தும் பணிகளை செய்ய உள்ளனர். இந்தியாவில் தற்போது குவான்ட் டிரேடிங் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இத்துறையில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More Articles
- 5 ஆண்டுகளில் 300% லாபம்.. தங்க நகை விற்கும் நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா?
- தூத்துக்குடியை தேடி வந்து முதலீடு செய்யும் கப்பல் நிறுவனம்..!! அடேங்கப்பா இத்தனை கோடியா?
- LIC பங்குகளை விற்று தள்ளும் மத்திய அரசு..!! இந்த முறை ரூ.31,000 கோடி டார்கெட்..!!
- ரூ.50,000 கோடி ரெடி..!! புது ஸ்கெட்ச் போடும் முதலமைச்சர் விஜய்..!! மக்களே எல்லாமே வீடு தேடி வரப் போகுது!!
- டிரம்புக்கு இவ்வளவு பணத்தாசை இருக்க கூடாது ; அதிபர் என்பதையே மறந்துவிட்டாரா? கொந்தளிக்கும் அமெரிக்கர்கள்
- வெறும் ரூ.100 சேமித்தால் ரூ.1 கோடி கிடைக்கும்! ஃபியூச்சர்ல பெரிய ஆள் ஆகணுமா? இதை பண்ணுங்க!