விஜய் தலைமையிலான அரசு அடுத்த சில நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசுக்கு உள்ள 13 லட்சம் கோடி ரூபாய் கடனை தீர்க்கும் முதல் படியாக சொந்த வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிக்க கொள்கை அளவிலும், நிர்வாக ரீதியிலும் ஆலோசனைகளை வழங்க பொருளாதார நிபுணர் மான்டெக் சிங் அலுவாலியா தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளார்.

Advertisement

யார் இந்த மான்டெக் சிங் அலுவாலியா..?
இவர் திட்ட கமிஷனின் துணை தலைவராக பணியாற்றியவர். இவர் தலைமையிலான குழுவில் தேசிய பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சிக் கழகத்தின் (NCAER) பொருளாதாரத் துறைத் தலைவர் பேராசிரியர் கே.பி. கிருஷ்ணன், வரிக் கொள்கை நிபுணர் அர்பிந்த் மோடி, மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் (CBEC) முன்னாள் தலைவர் நஜிப் ஷா, மாநில நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக் மற்றும் மெட்ராஸ் மேம்பாட்டு ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் எம். சுரேஷ் பாபு போன்ற முக்கிய நபர்களும் உள்ளனர்.

Advertisement

இக்குழுவின் முக்கியமான பணி என்னவென்றால் தமிழ்நாடு அரசு எப்படியெல்லாம் வருவாயை அதிகரிக்க முடியும் என்பதையும், மாநில அரசின் செலவுகளை முழுமையாக சொந்த வருவாய் மூலம் எட்டுவதற்கான ரோடுமேப்-ஐ உருவாக்குவது தான்.

இதைவிட முக்கியமாக தமிழ்நாடு அரசிடம் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் ஈவுத்தொகை, நிலம், சொத்துக்களை பணமாக்கும் முயற்சிகள், இதர கட்டணங்கள் வசூலிப்பு போன்றவற்றின் மூலம் எப்படி வரி அல்லாத வருவாய் ஈட்டுவது என்பதை ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்கும்.

இதன் மூலம் புதிய மற்றும் இதுவரையில் பயன்படுத்தப்படாத வழிகளில் வருவாயை ஈட்ட திட்டமிட்டு உள்ளது விஜய் தலைமையிலான அரசு. இதைவிட முக்கியமாக வருவாயை பாதுகாக்க, அரசு நிர்வாக கட்டமைப்பில் இருக்கும் ஓட்டைகளை கண்டறிந்து, வரி ஏய்ப்புகளை குறைத்து அரசின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்துவும் இக்குழு ஆலோசனை வழங்கும்.

Advertisement

சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், மாநிலத்தின் சொந்த வரி வசூல் வரலாறு காணாத வரையில் SOTR - GSDP விகிதம் 5.45 சதவீதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.