இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம், இந்திய நிறுவனங்கள் சீனாவை நம்பியிருக்க கூடாது என்பதற்காக பேட்டரி தயாரிப்பில் சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி தற்போது உற்பத்தியை துவங்க உள்ளது.
நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன துறை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் முக்கியமான உற்பத்தி பொருளாக இருக்கும் பேட்டரியில் தன்னிச்சையாக இயங்க வேண்டும், யாருடைய உதவியும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இத்தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
டாடா குழுமத்தின் கீழ் Agratas Energy Storage Solutions என்ற நிறுவனம் இயங்கி வருவது பலருக்கு தெரியாது. இந்த நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள் முதல் எனர்ஜி சேமிப்பு வரையில் பல இடத்தில் பயன்படுத்தப்படும் லித்தியம் ஐயன் பாஸ்பேட் பேட்டரியை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இந்த தொழில்நுட்பம் தற்போது முக்கியக்கட்டத்தை எட்டியிருக்கும் வேளையில் குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் பேட்டரி தொழிற்சாலையில் சோதனை முறையில் LFP பேட்டரியை விரைவில் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதயநிதி கைது: பட்ஜெட் வெளியிடும் நேரத்தில் எதிர்க்கட்சி குரலை ஒடுக்கும் TVK.. பிடிஆர் டிவீட்!
இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு பேட்டரி கட்டமைப்பு சீனாவில் இருந்து தான் வருகிறது. சீனாவும் தற்போது பேட்டரி ஏற்றுமதிக்கு பெரும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் வேளையில் சொந்த மண்ணில், சொந்த டெக்னாலஜி வைத்திருப்பது தான் நீண்ட கால வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்.
மறுமுனையில் இந்தியாவிலேயே பேட்டரி தயாரிக்கப்பட்டால் கட்டாயம் எலக்ட்ரிக் கார் முதல் ஸ்மார்ட்போன் வரையில் அனைத்து விதமான பொருட்களின் விலையும் குறையும் என எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் Agratas Energy நிறுவனத்தில் இந்தியா- தென் கொரியா, சீன இன்ஜினியர்கள் என பல நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் பேட்டரி உற்பத்தி பணிகளை ஆய்வு செய்து, தொடர்ந்து மெருகேற்றி வருகின்றனர்.
மேலும் சோதனை முயற்சியில் தயாரிக்கப்படும் முதல் பேட்ச் LFP பேட்டரிகளை ஆய்வு செய்து உறுதி அளித்த பின்பு முழுமையான உற்பத்தியை துவங்கும்.
தங்கம் விலை எவ்வளவு உயரும்.. அதிகப்படியான வாய்ப்பு இதுதான்..!
சீனா அரசு முக்கியமான தொழிற்நுட்பத்தை பிற நாடுகளுக்கு பகிர கூடாது என்ற கடுமையான சட்டத்தை கொண்டிருக்கும் வேளையில், ரிலையன்ஸ், JSW போன்ற பல முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்களும் தொழில்நுட்ப கூட்டணிக்காக முயற்சி செய்தும் தோல்வி அடைந்த நிலையில் தற்போது டாடா குழுமம் பல வருட ஆராய்ச்சிக்கு பின்பு வெற்றியின் அருகில் வந்துள்ளது.
இதேவேளையில் ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து NMC அதாவது nickel manganese cobalt பேட்டரிகளை தயாரிப்பதற்கும் உரிமத்தை பெற்றுள்ளது. இதுவும் Agratas நிறுவனத்திற்கு பெரும் லாபம் பின்நாட்களில் அளிக்க உள்ளது.
More Articles
- ஒரு நாளுக்கு 37 லட்சம் சம்பளம்.. இந்தியாவில் இப்படியொரு நிறுவனமா? வாவ்!
- ஆந்திரா வேண்டாம்.. செல்லக்குட்டியாக மாறிய வட-கிழக்கு மாநிலங்கள்.. டாடா பவர் ரூ.6700 கோடி முதலீடு ஒடிசாவுக்கு!
- நோயல் டாடாவுக்கு 'லாபத்தால்' பதிலடி கொடுத்த சந்திரசேகரன்.. டாடா குழுமத்தின் அடுத்த பெரிய மாற்றம்!
- நா உள்ளே.. நீ வெளியே.. மங்காத்தா ஆடும் டாடா - மஹிந்திரா..!
- ஆகஸ்ட் 18.. டாடா குழுமத்திற்கு முக்கியமான நாள்.. என்.சந்திரசேரகன் எதிர்காலம் என்ன?
- ஓசூர் டாடா ஐபோன் ஆலை மூடப்படுகிறதா? மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நோட்டீஸால் அதிர்ச்சி!!