புவிசார் குறியீடு பெற்ற விருதுநகர் சம்பா மிளகாய் பொருட்கள் முதல்முறையாக இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், குறிப்பாக ஆன்லைன் விற்பனை தளத்திலும் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் விருதுநகர் சம்பா மிளகாய் தமிழ்நாட்டை தாண்டி இனி உலகம் முழுவதும் விற்கப்பட்டு தமிழக விவசாயிகளை பெருமைப்படுத்த உள்ளது.

Advertisement

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் விருதுநகரில் முதல் ஏற்றுமதியை கொடி அசைத்து துவங்கி வைத்தார். SIDBI உதவியின் மூலம் உருவாக்கப்பட்ட தளத்தில் இருந்து முதல் ஆர்டர் வெளியாகியுள்ள நிலையில் இலங்கைக்கும், இந்தியாலில் ஆந்திா, ஹரியானாவுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

Advertisement

ஏற்றுமதி, மதிப்பு கூட்டு பொருட்கள், ஆன்லைன் வர்த்தகம் என பல பிரிவுகளில் விற்பனை செய்யப்படும் வேளையில், இப்பகுதி விவசாயகளுக்கு நிலையான வருமானம், வர்த்தக வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் விருதுநகர் மற்றும் அதை சுற்றியுள் பகுதிகளில் சம்பா மிளகாய் சாகுபடி அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் சம்பா மிளகாய்க்கு என பிரத்தியேகமாக SIDBI உதவியின் மூலம் உருவாக்கப்பட்ட Farmers Producer Organisation திறந்து வைத்தார் நிர்மலா சீதாராமன். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர், புதிய FPO அமைப்பு உருகாக்கியுள்ள சம்பா மிளகாய் மற்றும் அதன் மதிப்புக்கூட்டு பொருட்கள் என்பது இந்தியாவுக்கே அடையாளமாக விளங்கும் வர்த்தக மாடலாகும். விவசாயிகளுக்கு உதவி செய்வதை தாண்டி, மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு, மார்கெட்டிங், ஏற்றுமதி வரையில் பலதரப்பட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

Advertisement

Farmers Producer Organisation என்பது ஒரு பகுதியில் இருக்கும் விவசாயிகள் இணைந்து முதலீட்டையும், ஆதாரத்தையும் உருவாக்கி, பெரிய அளவில் வர்த்தகம் செய்ய உதாரணமாக ஏற்றுமதி செய்ய உருவாக்கப்படும் அமைப்பாகும். மத்திய அரசின் கீழ் இயங்கும் SIDBI வங்கி இத்தகைய அமைப்புக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்கிறது.

இந்த நிதியுதவி மூலம் உற்பத்தியை பெருக்குவது முதல் மதிப்பு கூட்டு பொருட்களுக்கான கட்டமைப்பை உருவாக்குவது, சிறு கிராமத்தில் இருந்து வெளிநாடுகள் வரையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்த உதவி என பலக்கட்டத்தில் SIDBI துணை நிற்கிறது.

மேலும் இக்கூட்டத்தில் பேசி நிர்மலா சீதாராமன் முக்கியமான விஷயத்தை விவசாயிகளுக்கு கூறினார், சம்பா மிளகாய் சாகுபடியில் குறைந்த அளவிலான பூச்சிக்கொல்லிகள் மட்டும் பயன்படுத்தி ஏற்றுமதிக்கு ஏதுவான பொருட்களை தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisement

சமீபத்தில் இந்தியாவில் மாம்பழம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத காரணத்தால் நாட்டின் பெரும் பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதில் முக்கியமாக ஜப்பான் இந்திய மாம்பழங்களுக்கு தடை விதித்தது முக்கியமானது. சீனா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளும் அதிகப்படியான பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்ட காரணத்தால் தடை விதித்தது.