இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குவிக் கமார்ஸ் நிறுவனமான ஜெப்டோ பங்குச்சந்தையில் பட்டியலிட ஐபிஓ வெளியிட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வந்த நிலையில் தற்போது பின்வாங்கியுள்ளது.

Advertisement

ஆனால் ஐபிஓ-வுக்கான முயற்சிகளை வீண் செய்யக்கூடாது என்பதற்காக தற்போது இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் மற்றும் ஐபிஓ-வில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டிய ஆங்கர் முதலீட்டாளர்களிடம் pre-IPO placement முறையில் 1000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்ட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

செபியின் விதியின் படி ஒரு நிறுவனம் pre-IPO placement முறையில் தன்னுடைய DRHP அறிக்கையில் fresh issue வழியாக திரட்ட திட்டமிட்டுள்ள தொகையில் 20 சதவீதம் வரையில் திரட்டிக்கொள்ள முடியும். ஆனால் தற்போது திரட்டப்படும் தொகை ஐபிஓ வெளியிடும் போது கழிக்கப்படும்.

ஜெப்டோ ஐபிஓ பணிகளை துவங்கியது முதல் மதிப்பீட்டில் பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது, இந்நிறுவனம் 6 மாதத்திற்கு முதலீட்டை திரட்டிய போது 7 பில்லியன் டாலர் மதிப்பிட்டில் நிதியை திரட்டியது.

ஆனால் ஐபிஓ விண்ணப்பம் செய்யும் போது 5 பில்லியன் டாலர் மதிப்பில் தான் 8000 கோடி நிதி திரட்ட இந்நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் பின்னாளில் இதையும் குறைத்து 2.5 -3 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 5000-6000 கோடி திரட்டுவதாக அறிவித்தது.

Advertisement

தற்போது ஜெப்டோ ஐபிஓ முயற்சியில் இருந்து ஜகா வாங்க முக்கியமான காரணம் மியூச்சுவல் நிறுவனங்கள் எடுத்த முடிவு தான். இந்தியாவின் டாப் 5 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களான SBI MF, ICICI Prudential, Kotak, HDFC ஆகியவை இந்நிறுவனத்தின் மதிப்பீட்டை ஏற்றுக்கொண்டாலும், இந்நிறுவனம் அதிகளவில் நிதியை செலவு செய்து வருவதால், தற்போது திரட்டப்படும் நிதி என்பது வேகமாக காலியாகிவிடும்.

இதனால் ஜெப்டோ நிறுவனத்தால் நிலையாக வளர முடியாது என்ற காரணத்தை முன்வைத்துள்ளதால், இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்ய முடியாது கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஜெப்டோ நிறுவனம் ஒரு காலாண்டுக்கு 900 கோடி ரூபாய் செலவு செய்கிறது. அதேபோல் வெறும் 3 காலாண்டுக்கான நிதி இருப்பை மட்டுமே தற்போது வைத்துள்ளது, இத்தகைய சூழ்நிலையில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்தால் அதன் முதலீட்டாளர்களுக்கு பெரும் ஆபத்தை தரும். ஜெப்டோ தனது செலவை 700 கோடியாக குறைந்துள்ளதாக கூறினாலும் இது முதலீட்டாளர்களால் ஏற்றுக்கொள்ளவில்லை.

Advertisement

இதேவேளையில் தற்போது சந்தையில் பல நிறுவனங்கள் உள்ளது, புதிதாக பிளிப்கார்ட், அமேசான் ஆகியவை வர போகிறது. ஜெப்டோ இதுநாள் வரையில் சுமார் 10000 கோடி ரூபாய் செலவு செய்து தான் தற்போதை நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையிலும் ஜெப்டோ லாபம் நிலையை எட்டாமல் 5905 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.