முதலீட்டாளர், பிரதி பத்திரத்திற்கென்று பிரத்யேகமாக உள்ள படிவத்தில் (என்சி29), அசல் பத்திரம் தொலைந்துவிட்டதா, திருடப்பட்டதா, சிதைந்து விட்டதா அல்லது உருக்குலைந்துள்ளதா என்பதை தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்விண்ணப்பத்தோடு தொலைந்த பத்திரங்கள் பற்றிய முக்கிய குறிப்புகள் அடங்கிய விவர அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பரிந்துரைக்கப்பட்ட வடிவிலுள்ள காப்புறுதிப் பத்திரத்தை, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஜாமீன்களுடனோ அல்லது ஒரு வங்கி உத்தரவாதத்துடனோ நிரப்பிக் கொடுக்க வேண்டும். அசல் பத்திரம் சிதைந்தோ அல்லது உருக்குலைந்தோ இருக்கும் பட்சத்தில், காப்புறுதிப் பத்திரம் தேவை இல்லை.
என்எஸ்சி என்று பிரபலமாக அழைக்கப்படும் தேசிய சேமிப்பு பத்திரங்கள், தபால்துறை அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன. இப்பத்திரங்கள் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் உங்களுக்கு வரி விலக்கு ஆதாயங்களை கொடுக்கவல்ல, மிகப் பாதுகாப்பான சாதனங்களாகும்.
என்எஸ்சி-யோடு ஒப்பிடுகையில், பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (பிபிஎஃப்) அதன் வரியற்ற வட்டி வழங்கும் தன்மையினால், மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. எனினும், பிபிஎஃப் திட்டத்தில் உச்ச பட்ச முதலீட்டுத் தொகையாக, வருடத்திற்கு 1 லட்ச ரூபாய் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது (அதாவது, ஒருவர், ஒரு வருடத்தில், அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் மட்டுமே பிபிஎஃப்-இல் முதலீடு செய்ய முடியும்).