"அனைத்து வணிக மையங்களிலும் அனைத்து ரக புராடக்ட்களையும் அறிமுகப்படுத்தவும், ஸ்ரீராம் வர்த்தக சாம்ராஜ்யத்துக்கும் அதன் நீண்ட-கால நுகர்வோருக்கும் இடையிலான உறவை பலப்படுத்தி அதனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் எங்கள் நிலைமை மற்றும் செயல்பாடுகளை ஒன்றிணைக்க பாடுபடும் அதே வேளையில் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளைப் போன்ற புதிய சந்தைகளில் நுழையவும் தீர்மானித்துள்ளோம்." என்று ஸ்ரீராம் சிட்டியின் நிர்வாக இயக்குநரான ஜி.எஸ். சுந்தரராஜன் அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நான்-கார்ப்பொரேட் நிதித்துறை மீது கவனம் செலுத்தி வரும் மிகப்பெரிய என்பிஎஃப்சி நிறுவனமான ஸ்ரீராம் சிட்டி, தற்போது குஜராத் மற்றும் அதன் தொழில்முனைவோரின் மீது தீவிர கவனம் செலுத்தவும், இத்தகைய நகரங்களின் மீது இரண்டு அடுக்கு கவனம் செலுத்தவும் ஆர்வம் காட்டி வருகிறது.