சென்னை: இன்றைய இளைய தலைமுறை தான் நாளைய இந்தியாவின் எதிர்காலம், என்பதை நினைவாக்கும் வகையில் இன்று இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்களுக்குக் கல்வி கடன் கிடைக்கிறது. இதன் மூலம் பல குடும்பங்கள் இன்று பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது என்றால் மிகையாகாது.
இந்நிலையில் இந்தியாவில் படித்தாலும் சரி, வெளிநாடுகளில் படித்தாலும் சரி கல்வி கடன் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
கல்வித் தகுதி..!
இந்தியா அல்லது அயல்நாட்டில் தொழில்முறை அல்லது தொழில்நுட்ப மேல்படிப்பு படிக்கும் மாணவர்களுக்குத் தகுதி அடிப்படையில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.
காரணம் படிப்பு ஏற்றார் போல் கடன் அளவு மாறுபடும்.
ரூ.25 லட்சம்
இந்திய வங்கிகளின் சம்மேளனத்தின் ( Indian Banks' Association )விதிமுறைகளின்படி வங்கிகள் இந்திய கல்லூரிகளில் படிப்பதற்கு ரூபாய் பத்து லட்சமும் அயல்நாட்டுக் கல்லூரிகளில் படிப்பதற்கு ரூபாய் இருபது லட்சமும் வழங்குகிறது.
இணை விண்ணப்பதாரர்
கல்விக்கடன் பெறுவதற்கு இணை விண்ணப்பதாரர் அவசியம் தேவை. பெற்றோர்கள், வாழ்க்கை துணைவர் அல்லது உடன்பிறந்தவர்கள் யாரேனும் இருக்கலாம்.
ஜாமீன் தேவையில்லை
ரூ.4 இலட்சத்திற்குக் குறைவான கல்விக் கடனுக்குப் பாதுகாப்பு ஜாமீன் எதுவும் தேவையில்லை. ரூபாய் நான்கு இலட்சத்திற்கு மேல் கல்விக் கடன் தேவைப்படுமானால் கடன் கொடுக்கும் வங்கி ஏற்கத்தக்க வகையில் வருமானம் உள்ள நபரின் தனிப்பட்ட உத்தரவாதம் தேவைப்படும். ரூபாய் ஏழரை இலட்சத்திற்கு மேல் கல்விக் கடன் தேவையெனில், குடியிருக்கும் வீடு, தங்கநகை போன்ற இணையப் பாதுகாப்பு ஜாமின் தேவைப்படும்.
ஒரு வருட அவகாசம்
கல்விக்கடனைப் படிப்பு முடிந்து ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திலிருந்து திருப்பிச் செலுத்தவேண்டும், இந்தக் காலக் கட்டத்தில் எளிய வட்டி வசூலிக்கப்படும்.