வணிகர்கள் பலர் வாட் வரி முறையே நன்றாகத் தான் இருக்கின்றது. ஜிஎஸ்டி வரி ஆளுமையினால் அப்படி என்ன தான் நடந்து விடப் போகின்றது என்று நினைப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை சரியான விளக்கமாக இருக்கும்.
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ஆளுமையின் கீழ் பதிவு செய்த வணிகர்களுக்கு, வர்த்தகர்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கின்றது என்று இங்குப் பார்க்கலாம்.
சட்டப்படி அங்கிகாரம்
சரக்கு அல்லது சேவை வணிகம் செய்பவர்கள் ஜிஎஸிடி ஆளுமைக்குப் பதிவு செய்யும் போது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வழங்குநராகக் கருதப்படுகின்றார்.
முறையான கணக்கு
உள்ளீட்டுச் சரக்கு அல்லது சேவைகளுக்கான வரியை முறையாகக் கணக்கில் காண்பித்து வரி செலுத்தி இருந்தால் அதை முறையாகச் சரக்கு மற்றும் சேவை வழங்கியதற்கான ஆதாரமாகக் காண்பித்து வரி பாக்கியை செலுத்த பயன்படுத்தலாம்.
வரி வசூலித்தல்
பொருட்களை வாங்கியவர்களிடம் இருந்து முறையாக வரியை வசூலிக்க மற்றும் வாங்கியவர்களிடமோ அல்லது பெறுநர்களிடமிருந்தோ வழங்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்குச் செலுத்திய வரிகளின் கடனை சரி செய்ய உதவும்.
பிற நன்மைகள்
ஜிஎஸ்டி சட்டங்களின் கீழ் அளிக்கப்பட்ட பல்வேறு நன்மைகள் மற்றும் சலுகைகள் பெறத் தகுதியுள்ள வணிகமாகப் பார்க்கப்படும்.