சவரன் தங்கப் பத்திரம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒரு திட்டமாகும். இந்த திட்டம் திடவடிவ தங்கத்தில் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் வழங்குகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தை வெளியிட்டாலும், உண்மையில், ஆர்பிஐ இந்த பத்திரங்களை இந்திய அரசாங்கத்தின் சார்பாக வெளியிடுகிறது. இந்த தங்கப் பத்திரத்தின் மதிப்பு மும்பையில் தங்கத்தின் விலைகள் மாறுவதைப் பொறுத்து அதிகரிக்கவும் மற்றும் குறையவும் செய்யும்.
யார் முதலீடு செய்யலாம்..?
இந்த தங்கப் பத்திரங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் தனிநபர்களுக்கானது. முதலீட்டிற்காக தங்கக் கட்டிகளை வாங்குபவர்கள், அதற்கு பதிலாக இந்த தங்கப் பத்திரங்களை வாங்கலாம்.
கட்டணங்கள்
ஒரு முதலீட்டாளர் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் கட்டித் தங்கத்தை வாங்கும்பொழுது சில கட்டணங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால் அவர் சவரன் தங்கப் பத்திரங்களைத் தேர்ந்தெடுத்தால் இந்தக் கட்டணங்களைச் செலுத்தத் தேவையில்லை.
வட்டி வருமானம்
இந்தத் தங்கப் பத்திரங்கள் சந்தையில் கட்டித் தங்கத்திற்குள்ள கிராக்கியை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் கட்டித் தங்கத்தை வாங்குவதற்குப் பதிலாக இந்தத் தங்கப் பத்திரங்களைத் தேர்ந்தெடுத்தால், இத்துடன் அவர்கள் சிறிது வட்டியையும் ஈட்ட முடியும்.
இந்த வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.
வாங்குவதும் விற்பதும் எளிது..
நீங்கள் சவரன் தங்கப் பத்திரங்களை பங்குச் சந்தையில் வாங்கவும் அல்லது விற்கவும் முடியும். நீங்கள் மும்பையிலுள்ள தங்க விலை நிலவரங்களைக் கண்காணித்தால் தங்கப் பத்திரங்களை விரைவாக வாங்கவோ அல்லது விற்கவோ முடியும்.