பேலன்ஸ்டு அல்லது ஹைபிரிட் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வது அதிகரித்து வருகின்றது. ஒரு ஆண்டுக்கு முன்பு வரை 57,000 கோடியாக இருந்த முதலீடுகள் நடப்பு ஆண்டில் 1.35 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
பேலன்ஸ்டு ஃபண்டு குறித்து முழுமையாகத் தெரிந்துகொண்டு நீங்களும் முதலீடு செய்யுங்கள்.
பேலன்ஸ்டு ஃபண்டுகள் என்றால் என்ன? போர்ட்போலியோ எப்படிச் செயல்படுகின்றது?
பேலன்ஸ்டு ஃபண்டுகள் தான் ஹைபிரிட் ஃபண்டுகள் என்று அழைக்கப்படுகின்றது. இந்த முதலீட்டுத் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் பங்கு சந்தை மற்றும் கடன் முதலீட்டுத் திட்டங்கள் எனக் கலந்து முதலீடு செய்யப்படும். பங்குச் சந்தை சார்ந்து பேலன்ஸ்டு ஃபண்டுகள் 65 முதல் 75 சதவீதம் வரை பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுகின்றது, மீத தொகை கடன் பத்திரங்கள் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றது.
பாதுகாப்பான திட்டம்
முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யும் போது வல்லுனர்கள் பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடுகள் செய்வதையே பரிந்துரைக்கின்றனர்.
பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் உள்ள நன்மைகள் என்ன?
எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் அல்லது எந்த வகை ஃபண்டுகளை வாங்க வேண்டும் மற்றும் எப்போது செய்ய வேண்டும் என்பது கடினமான விஷயமாகும். ஒரே பங்குகளில் மொத்தமாக முதலீடு செய்ய விரும்பாதவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
பங்கு சந்தை சார்ந்த முதலீடுகள் நீண்ட காலப் பயனை அளிக்கும், இதுவே கடன் சார்ந்த முதலீடு திட்டங்கள் நிலையான போர்ட்போலியோவை அளிக்கும்.
ஈக்விட்டி அல்லது கடன் முதலீடு திட்டம் என ஏதாவது ஒன்று மோசமான நிலையினைச் சந்திக்கும் போது மற்றொரு திட்டம் அதனைச் சமாளித்துவிடும். சந்தை உச்சத்தில் இருக்கும் போது பங்குகளை நிர்வகிப்பவர்கள் சில அளவினை விற்க வேண்டும் அப்போது தான் அதிகபட்ச அளவினை நிர்வகிக்க முடியும், அதே நேரம் சந்தை சரிந்து இருக்கும் போது பங்குகளைக் கொஞ்சம் வாங்கிப் போட வேண்டும், இது ஈக்விட்டி முதலீட்டு அளவினை சமன்படுத்துவதற்காக ஆகும். இப்படி எல்லாம் செய்யும் போது முதலீடுகள் நல்ல லாபத்தினை அளிக்கும்.
வரி நண்மைகள் என்னென்ன?
பேலென்ஸ்டு ஃபண்டுகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமாக முதலீடு செய்யும் போது அதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும். இதுவே ஒரு வருடத்திற்கும் அதிகமாகப் பங்குகளை விற்காமல் இருந்தால் வரும் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும் என்பது இல்லை.
இதுவே கடன் திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகின்றது.
36 மாதங்கள்
புதிய வரிச் சட்டங்கள் வந்த பிறகு டெபிட் முதலீடு திட்டங்களில் 36 மாதங்களுக்கும் குறைவாக முதலீடு செய்து இருந்தால் வரி செலுத்த வேண்டும்.பேலன்ஸ்டு ஃபண்டு திட்டத்தில் ஒரு வருடத்திற்கும் அதிகமாக முதலீடு செய்தால் வரி விலக்கு கிடைக்கும். கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும் போது நீண்ட கால முதலீடாக இருப்பின் 36 மாதங்களுக்குப் பிறகு வரி விலக்கு கிடைக்கும்.