தேசீய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்தல் எப்படி பயனளிக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓய்வூதிய சேமிப்பு திட்டமிடல்கள் இல்லாவிட்டால் அது தீவிரமானத் தாக்கங்களை ஏற்படுத்தும். நிதி வடிவங்களை மற்றும் சமூக விதிமுறைகளை மாற்றுதல் பாதுகாப்பற்ற எதிர்கால நம்பிக்கைக்கு வழிவகுக்கும். தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) மக்களின் உழைக்கும் வாழ்க்கையின் முடிவில் அவர்களுக்கு அடிப்படை சமூக பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்ய வயது வரம்பு 65 ஆகும். என்பிஎஸ் திட்டத்தில் இந்த நன்மைகளெல்லாம் இருக்கின்றன.

முதலீட்டுத் தேர்வின் வரம்புகள்:

முதலீட்டுத் தேர்வின் வரம்புகள்:

என்பிஎஸ் திட்டத்தின் கீழ் இரண்டு வகை கணக்குகள் இருக்கின்றன - அடுக்கு I மற்றும் அடுக்கு II. அடுக்கு I கணக்கில் 60 வயது வரை பணத்தைத் திரும்பப் பெற முடியாது மேலும் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு பிறகு பகுதியாகப் பணத்தைத் திரும்பப் பெறலாம். அடுக்கு II - கணக்கில் பணத்தைத் திரும்பப் பெறுதல் சுய விருப்பத்திற்குட்பட்டது. என்பிஎஸ் திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்களுக்கு ஓய்வூதிய நிதியை நிர்வகிக்க எட்டு வெவ்வேறு புகழ்பெற்ற நிதி நிர்வாக நிறுவனங்களுக்கு இடையே தேர்வு செய்யும் வாய்ப்பு உண்டு.

மேலும் முதலீட்டாளர்களுக்கு அவர்களுடைய ஓய்வூதிய நிதியின் முதலீட்டு கலவையை தீர்மானிக்க விருப்ப உரிமை உள்ளது. செயல்பாட்டில் உள்ள இந்தத் தேர்வில் பங்குகளின் சதவிகிதம், பெருநிறுவனக் கடன் மற்றும் அரசாங்க பத்திர காப்பு முனைமங்களை முதலீட்டாளரே தீர்மானிக்கிறார். தானியங்கித் தேர்வு முதலீட்டாளரின் வயதை அடிப்படையாகக் கொண்டு சொத்து ஒதுக்கீட்டைத் தேரந்தெடுக்கும்.

 

குறைந்த செலவு:

குறைந்த செலவு:

என்பிஎஸ் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்ட நிதிகள் ஏயுஎம் கட்டணமான 0.01% த்தையும், மற்றும் பங்கு பரஸ்பர நிதிகளுக்கு எதிராக 1% த்தையும் கவர்கின்றன.

வரிப்பயன்கள்:
 

வரிப்பயன்கள்:

முதலீட்டாளர்கள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சிசிடி இன் கீழ் ரூ. 1.5 இலட்சம் வரையிலும் வரிப்பயன்களைப் பெறுவதற்கு தகுதியுடையவர்களாகிறார்கள். மேலும், பிரிவு 80 சிசிடி (1பி) இன் கீழ் ரூ. 50,000 கூடுதல் நற்பயன் உண்டு. இருந்தாலும், இந்த நற்பயன்கள் அடுக்கு I கணக்கில் முதலீடு செய்யப்பட்ட பங்களிப்புகளுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும்.

 

 

இடம்பெயர்வு திறன்:

இடம்பெயர்வு திறன்:

என்பிஎஸ் நிலையான ஓய்வூதியக் கணக்கு எண்ணை (ப்ரான்) அளிக்கிறது. இந்த பிரான் எண் தனிநபர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் இதை இந்தியா முழுவதுமுள்ள எந்த முகவரிக்கு வேண்டுமானாலும் இடமாற்றம் செய்துக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How investing in NPS will benefit you

How investing in NPS will benefit you - Tamil Goodreturns | தேசீய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்தல் எப்படி பயனளிக்கும்? - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X