லைஃப் இன்ஷூரன்ஸை, 'பாதுகாப்பு அளிக்கக்கூடியது' என்ற வட்டத்துக்குள் மட்டுமே அடைத்து விட முடியாது. ஏனெனில், லைஃப் இன்ஷூரன்ஸானது நிதி தொடர்பான திட்டமிடல்களில் முக்கியக் கருவியாக விளங்கி உங்கள் வாழ்வின் இலக்குகளை அடைய உதவும் ஒர் அற்புதமான சாதனமாகும். குழந்தையின் கல்விக்கான செலவு, திருமணம், சொந்த வீடு அல்லது கார் வாங்குதல், ஓய்வுக் காலத்தில் தனக்கான திட்டமிடல் போன்ற ஏதுவாக வேண்டுமானாலும் அவ்விலக்குகள் இருக்கலாம்.
சேமிப்புக்கான வழிகள் இல்லாத டெர்ம் ப்ளான்கள் பாதுகாப்பு குறைந்தவையே என்றாலும், தெளிவான வடிவமைப்பு மற்றும் நேர்த்தியுடன் கூடிய எஸ்ஐபி அடிப்படையிலான ஸேவிங்க்ஸ் ப்ளானுடன் இவற்றை ஒருங்கிணைத்தால், இவை ஒருவரது ஃபைனான்ஷியல் இலக்குகளை எட்ட மிகவும் உதவிகரமாக இருக்கும்.
உங்கள் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ற பாலிசிகள் எவை என்பதைப் பார்க்கலாமா?
திருமணம் செய்து கொள்ளத் திட்டமிடும்போது
நீங்கள் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிடும்போது உங்கள் ஃபைனான்ஷியல் போர்ட்ஃபோலியோவில் டெர்ம் இன்ஷூரன்ஸ் கட்டாயம் இடம்பெற வேண்டும். எவ்வளவு சீக்கிரம் வாங்குகிறீர்களோ அவ்வளவு குறைவாக ப்ரீமியம் கட்டினால் போதும்; அதுவும் அதே அளவிலான காப்பீட்டுக்கு. டெர்ம் காப்பீடானது, உங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தாலும் கூட, உங்கள் துணைவரின் பணத்தேவையை நிவர்த்திச் செய்யும்.
டெர்ம் ப்ளான்
டெர்ம் ப்ளான் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 வருடங்கள்; அதே சமயம், அதிகபட்ச வயது வரம்பு 65 வயது வரை ஆகும். உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் பணி ஆகியவை உச்சநிலையில் இருக்கும் போது இதனை வாங்குவது சிறந்தது.
ஏனெனில், வயது ஏற ஏற ரிஸ்க் ஃபேக்டர்ஸ் கூடும்; இதன் விளைவாக அதிக ப்ரீமியம் தொகை செலுத்த நேரிடலாம். உங்கள் தற்போதைய வருவாயின் அடிப்படையிலேயே பேஸிக் கால்குலேஷன் செய்யப்படுகிறது. பொதுவாக, இதில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய திட்டவட்டத் தொகை உங்கள் ஆண்டு வருமானத்தை விட 15 முதல் 20 மடங்காக இருக்கும்.
உங்களுக்குக் குழந்தை பிறக்கும்போது
டெர்ம் காப்பீட்டின் நோக்கம் உங்கள் குடும்பத்தைக் காப்பதே, அதிலும் முக்கியமாக உங்கள் குடும்பத்தில் நீங்கள் மட்டுமே சம்பாதிப்பவராக இருந்து, உங்களை மட்டுமே உங்கள் குடும்பம் நம்பியிருக்கும் பட்சத்தில் டெர்ம் ப்ளான் கை கொடுக்கும்.
கடன் சுமை
மேலும், வீட்டுக்கடன் அல்லது வேறு ஏதாவது கடன் சுமை உங்களுக்கு இருப்பின், டெர்ம் இன்ஷூரன்ஸ் வாங்குவது தான் சாலச் சிறந்தது. ஏனெனில் உங்கள் இறப்பினால் ஏற்படக்கூடிய பண நெருக்கடியிலிருந்து உங்கள் குடும்பத்தாரை காக்கவல்லது இது. ரைடர்களுடன் கூடிய டெர்ம் ப்ளான், நீங்கள் அசம்பாவிதமாக விபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டாலோ அல்லது எதிர்பாராத விதத்தில் உடல் உறுப்பு எதையும் இழக்க நேரிட்டாலோ, உங்களுக்குச் சிறப்பான முறையில் கை கொடுக்கும்.
படிப்புச் செலவு
அதே நேரம், உங்கள் குழந்தையின் படிப்புச் செலவுக்கென நீங்கள் திட்டமிடுகிறீர்கள் என்றால், யூனிட் லிங்க்ட் இன்ஷூரன்ஸ் ப்ளான்களைக் கூட (யுஎல்ஐபி) தேர்வு செய்யலாம். இப்பிளானை வாங்கும் போது, குறிப்பிட்ட ஃபைனான்ஷியல் இலக்கை எட்ட உதவும் ஃபண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்யும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், தேவைப்படும் சமயத்தில் ஆயுள் காப்பீட்டை மாற்றிக் கொள்ளக்கூட அனுமதிக்கப்படுவதால், உங்கள் ப்ரீமியம் தொகையை மாற்றுவதற்கும் இது உதவுகின்றது.
எதிர்காலச் சேமிப்பு
குழந்தையின் எதிர்காலத்துக்கெனச் சேமிப்பதற்குத் திட்டமிட்டால், அது பிறந்தவுடனேயே அல்லது பிறந்த ஒரு வருடத்துக்குள்ளோ ஆரம்பிப்பது நல்லது. அப்போது தான் அடுத்த 18-20 வருடத்தில் அதன் உயர் படிப்புக்குத் தேவைப்படக்கூடிய அளவுக்குக் கணிசமான பணத்தை உங்களால் சேர்க்க முடியும்.
மாதம் 10,000 ரூபாய்
உதாரணமாக, உங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகும் போதிலிருந்து மாதம் 10,000 ரூபாயை, அடுத்து வரும் 18 வருடங்களுக்கு நீங்கள் சேமித்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மெச்சூரிட்டிக்குப் பின் உங்கள் கையில் கிடைக்கக்கூடிய தொகை சுமார் 38 லட்சம் ரூபாய் ஆகும்.
இதை வைத்து உங்கள் குழந்தையின் கல்லூரிக் கட்டணத்தை நீங்கள் எளிதாகக் கட்டலாம்.
4 சதவீத பணவீக்கம்
பணவீக்கம் ஆண்டுக்கு சுமார் 4 சதவீதம் என்ற அனுமானத்தில் இறுதித் தொகை கணக்கிடப்படுகிறது. எனவே, இது உங்கள் குழந்தையின் கல்விச் செலவுக்கு நிச்சயம் போதுமானதாக இருக்கும்.
நீங்கள் பணி ஓய்வை நெருங்கும்போது
பணி ஓய்வுக்குப் பிறகும் நீங்கள் பணத்திற்காக யாரையும் சார்ந்திருக்கக் கூடாது என்று விரும்பினால், அதற்காக முன்கூடியே தெளிவாகத் திட்டமிட வேண்டும். உங்கள் அன்றாடச் செலவுகள் மற்றும் மருத்துவச் செலவுகளை எளிதாகச் சமாளிக்கும் வகையில் உங்கள் திட்டமிடுதல் இருக்க வேண்டும். மேலும், பணியில் இருந்த போது கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்த சொத்துக்களைப் பணி ஓய்வுக்குப் பின்னரும் பத்திரமாக வைத்திருக்கப் பாருங்கள்.
உங்கள் பணிக்காலத்தின் ஆரம்பக் காலகட்டத்தில், கொஞ்சம் முயன்று அதிக ரிட்டர்ன்களைத் தரக்கூடிய ஈக்விட்டிகளில் முதலீடு செய்யப்பாருங்கள். பணி ஓய்வு நெருங்கும் சமயத்தில் இந்த ஹோல்டிங்குகளை டெப்ட் யுஎல்ஐபிக்களுக்கு மாற்றி, சாதகமற்ற சந்தை மாற்றங்களிலிருந்து உங்கள் மெச்சூரிட்டித் தொகையைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
ULIP திட்டங்கள்
பொதுவாக, யுஎல்ஐபி ப்ளான்கள் எண்டோமெண்ட் ப்ளான்களைப் போல் இறுதி தேதி அல்லது மெச்சூரிட்டி தேதியுடன் தான் வருகின்றன. மேலும், மாதாந்திர வருமானம் கிடைக்கும்படியான யுஎல்ஐபி பென்ஷன் ப்ளான்களும் சந்தையில் கிடைக்கின்றன.
நீண்ட-கால யுஎல்ஐபி திட்டம்
பணி ஓய்வு நோக்கில் பார்த்தால், நீண்ட-கால யுஎல்ஐபி திட்டத்தை வாங்குவதே சிறந்தது. இது மியூச்சிவல் ஃபண்ட் போன்றே செயல்படும். மாதாமாதம் நீங்கள் செலுத்தும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
இப்பெருந்தொகையினைக் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தபின் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எனவே, நீங்கள் தற்போது உங்கள் 30-வயதுகளில் இருந்தால், சுமார் 20-30 வருட யுஎல்ஐபியை எடுத்துக் கொள்ளலாம்.
மாதாந்திர வருமானம்
இக்காலகட்டத்தின் இறுதியில் சேரும் தொகையைப் பயன்படுத்தி மாதாந்திர வருமானம் கொடுக்கும் ஆன்யுட்டி ஒன்றை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இது போன்ற யுஎல்ஐபியின் சிறப்பம்சம் என்னவென்றால், இவை உங்களுக்கு ஈக்விட்டி ரிட்டர்ன்களைக் கொடுக்கும், எனவே, இவை நீண்ட கால அவகாசத்தில் நன்றாகவே அதிகரிக்கும்.
இலக்குகள்
அசம்பாவிதம் ஏதும் நேரும் பட்சத்தில், இந்தப் பாலிஸி ப்ரொஸீட்களை, குறிப்பிட்ட கெடு தேதி முடியும் காலம் வரை, நியமனம் செய்யப்பட்ட நம்பகமான நபர் மூலம் ரீஇன்வெஸ்ட் செய்யலாம். இதன் மூலம் நீங்கள் இல்லாத போதும் உங்கள் குழந்தையின் கல்வி போன்ற புறந்தள்ள முடியாத இலக்குகளைப் பூர்த்திச் செய்ய முடியும்.