ஓய்வூதிய நிதி நிர்வாகமான வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிஎப் சந்தாதார்களுக்குப் பணத்தினைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் epfigms.gov.in என்ற இணையதளம் மூலமாகப் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
புகார் அளிப்பது மட்டும் இல்லாமல் புகார்கள் குறித்த நிலையினையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
பிஎப்
2017-ம் ஆண்டு முதல் ஈபிஎப்ஓ பணத்தினை விதிடிராவ் செய்வது, பென்ஷன் மற்றும் காப்பீடு போன்றவற்றை10 முதல் 20 நாட்களுக்கு அளிப்பதற்கான பணிகளை முடித்துவிட்டுச் செயல்படுத்தியும் வருகிறது.
இணையதளம் மூலமாகப் பிஎப் பணத்தினைப் பெறுவது எப்படி?
இணையதளம் மூலமாகப் பிஎப் பணத்தினைத் திரும்பப் பெற 2017 மே 1ம் தேதி முதல் புதிய சேவையினை https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ மூலமாக வழங்கி வருகிறது. இந்த இணையதளம் மூலமா எளிதாக உங்கள் பிஎப் பணத்தினைத் திரும்பப் பெற முடியும். இதற்கு நீங்கள் ஆதார் எண், மொபைல் எண், பான் எண், வங்கி கணக்கு எண் போன்றவற்றை இந்த இணையதளத்தில் இனைக்க வேண்டும்.
ஈபிஎப் சட்டம்
இணையதளம் மூலம் நீங்கள் வைக்கும் கோரிக்கையினைப் பிஎப் நிர்வாகம் சரியான முறையில் தீர்க்கவில்லை என்றால் ஈபிஎப்ஓ நிர்வாகத்திற்கு என்று மின்னணு நீதிமன்றம் சேவையும் உள்ளது. எந்த ஒரு பேப்பரும் இல்லாமல் இணையதளம் மூலமாக நீங்கள் அளித்த புகார்கள் குறித்து விசாரிக்கப்பட்டு EPF & MP Act, 1952-ன் கீழ் உங்கள் குறைகள் தீர்க்கப்படும்.
யூஏஎன்
இணையதளக் குறை தீர்ப்பு மையத்தில் யூஏஎன் எண் உங்களிடம் இருந்தால் மட்டுமே புகார்களை அளிக்க முடியும்.