மதிய உணவுக்கு ஒரு ஹோட்டலுக்கு கும்பலா போய் இருந்தோம். ரவுண்ட் கட்டி சாப்பிட்டோம் அனைவரும். பில் கொண்டு வந்தார் வெய்ட்டர். நமது நண்பர் பில்லை பிரித்து மேய்ந்தார். எனக்கு ஒரே ஆச்சர்யம். நான் இதுவரை அப்படிப் பில்லை ஆராய்ந்து பார்த்ததேயில்லை. நல்ல வழக்கம் தானே என்று நானும் பின்பற்ற ஆரம்பித்தேன். அன்றுமுதல் மொபைல் பில், மளிகை பில், பாங்க் ஸ்டேட்மெண்ட் என எல்லாவற்றையும் உற்றுப் பார்த்து அதில் இருக்கும் விவரங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த பணத்தை சின்ன கவனக்குறைவால் வீணாக்கலாமா? இப்போது மேட்டர்க்கு வருவோம்.
மியூச்வல் ஃபண்டில் முதலீடு செய்வது நல்ல லாபத்தினை அளிக்கும். எஸ்ஐபி மூலமாக மாதாமாதம் நம்மால் முடிந்த தொகையை மியூச்சுவல் ஃபண்டில் போட்டு சீரான வளர்ச்சியைக் காணலாம். அப்படி நாம் சேர்க்கும் பணத்திற்கு நமக்கு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தில் இருந்து அறிக்கை ஒன்று அனுப்பப்படும். அதிலே கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை இங்கே பார்ப்போம்.