நிதி நிலையில் ஒரு வலுவான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஒருவரின் கனவுக்கும், ஓடியாடி உழைப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால், அநேகம் பேர் இருப்பதாகத் தான் கூறுவார்கள். படுக்கையை விட்டு வேகமாக எழுந்து விட்டால் மட்டும் நிதிநிலை சீராகிவிடுமா என்ன,. நேரமும், காலமும் இதில் ஒத்து வராது. அணுகுமுறைகள் சரியாக இருந்தால் படுத்துக்கொண்டே கூடச் சம்பாதிக்க முடியும்.
செல்வம் அதவாது நிதிச்செருக்குத்தான் மற்றவரிடம் ஒருவனை வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்தக் காரணியை அடைவதற்கு வேலை செய்தால் நிதிநிலையை ஈட்ட முடியும் என்று ஆலோசகர்களின் பொதுவான கருத்துக் கூறுவார்கள்.
நீதிக்கதை
புரூனோ மற்றும் பப்லோ என்ற இரண்டு கதாப்பாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நீதிக்கதை, நிதிச்சுதந்திரத்தை எட்டுவது தொடர்பாகச் சிந்தனையைத் தூண்டுகிறது. மலைக்கிராமத்தில் வசித்த 2 நண்பர்களின் பணம் சம்பாதிக்கும் சாதுரியத்தைச் சுட்டிக்காட்டுகிறது. மலையிலிருந்து கிராமத்துக்குத் தண்ணீர் எடுத்துச் சென்று புரூனோ என்பவன் சம்பாதித்தான். இத்துடன் புரூனோ திருப்தி அடைந்த நிலையில், எதுவுமே செய்யாமல் இருந்த பப்லோ சில நாட்களுக்குப் பிறகு குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்றான். அவன் ஓய்வு நேரம் குழாய் மூலம் எடுத்துச் செல்லும் புதுமையான சிந்தனையைத் தூண்டியுது. இப்படிச் சம்பாதித்த பப்லோ ஒரு வீடும், மாடும் வாங்கினான்.
காலப்போக்கில் வாளியில் தண்ணீர் எடுத்துச் சென்று விற்கும் முறை காலாவதியானது. குழாய் மூலமாகத் தண்ணீரை விநியோகித்து, உழைப்பே இல்லாமல் பப்லோ பணம் சம்பாதித்தான். சும்மா இருப்பவர்கள் ஓய்வு நேரங்களில் எடுக்கும் சில முடிவுகள் பணம் சம்பாதிக்க உதவுகிறது என்பதுதான் இதன் சாராம்சம் ஆகும். பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் பப்லோ போன்று நாமும் சம்பாதிக்க முடியும்.
சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்
முறையான முதலீடு செய்வதற்கு, முறையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பங்குச் சந்தையில் எஸ்.ஐ.பி. எனப்படும் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளானில் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கலாம். ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கிலிருந்து தானாகவே முதலீட்டுக்கான பங்களிப்புத்தொகை பிடித்தம் செய்யப்படும் . இது சந்தைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் இடர்களில் உள்ள ரிஸ்க்கை பெருமளவு குறைப்பதாக இருக்கும். உங்கள் வருவாயில் சிறு பகுதியை இதில் முதலீடு செய்வதன் மூலம், ஒரு நிலையான வணிகத்தை மேற்கொள்ள முடியும்.
கூட்டு அதிகார முதலீடு
குறுகிய காலத்தில் வருவாயை ஈட்டுவதற்குப் பல முதலீட்டாளர்கள் கூட்டு அதிகாரம் தந்திரத்துடன் வாங்கவும், பரிவர்த்தனை செய்வதிலும் ஈடுபடுகிறார்கள். இது ஒரு எதிர்பாராத துணிச்சலாக இருந்தாலும், வலுவான நீண்ட கால அடிப்படையில் கூட்டு அதிகாரத்தின் மீது முதலீடு செய்யலாம். குறிப்பிட்ட காலத்தில் உங்கள் பணத்தைப் பலமடங்கு அதிகரிப்பதாக இது இருக்கும். சியட், மோதிலால் ஆஸ்வால், ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் கடந்த 5 ஆண்டுகளில் 8 லிருந்து 12 மடங்கு வரை உயர்ந்துள்ளது. சில நேரத்தில் இந்தவகையான பங்குகள் முதலீட்டாளர்களிடையே குழப்பத்தைத் தோற்றுவிக்கும். ஆதலால் சரியான தருணத்தில் முதலீடு செய்ய வேண்டும்
கவலை இல்லாத முதலீடு
ஒரு தொடர்ச்சியான வருவாயை ஈட்டுவதற்கு ஈக்விட்டிஸ் தவிரப் பிற வகைப்பாடுகளில் நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம். மந்தமான இந்த வருவாயாக இருப்பினும், இது கவலையைத் தருவதை விட அதன் மீது ஒரு நாட்டத்தை ஏற்படுத்தும்.
கடன்களை அடையுங்கள்
கடன்களை முழுமையாக அடைக்க வேண்டும். இது நேரடியாக எந்த வருவாயையும் ஈட்டித் தராவிட்டாலும் உங்களது செலவினங்களைக் குறைக்க உதவும். ஒவ்வொரு மாத இறுதியிலும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் உங்கள் பாக்கெட்டை நிரப்பு வழி செய்யும்.
பணம் பெருக வழி
கொடுக்கப்பட்ட பரிந்துரைகளை ஆலோசித்துப் புரிந்து கொண்டால் இது உங்கள் இலக்கை அடைவதற்கு உதவி செய்யும். உங்களிடம் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைக் கோருவதாக இருந்தாலும், நீண்ட காலத்துக்குப் பணத்தைப் பலமடங்கு உயர்த்த உறுதுணை புரியும்.