மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு மத்திய நேரடி வரி ஆணையம், வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் கடைசி தேதியான ஜூலை 31,2018ஆம் தேதியை வரி செலுத்தும் சில பிரிவினருக்கு மட்டும் நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 31, 2018ஐ கடைசி தேதியாக அறிவிக்கப்படுகிறது என டீவிட் வெளியிடப்பட்டு இருந்தது.
கேள்வி
ஆனால் இந்த சில பிரிவினர் யார் என்ற விபரத்தை அரசு ஆணையிலும் முழுமையான விபரம் அளிக்கப்படாத நிலையில் இந்த கடைசி நாள் நீட்டிப்பு யாருக்கும் என கேள்விகள் எழுகிறது.
யாருக்கெல்லாம் வரி விலக்கு?
தனிநபர் மற்றும் ஹிந்து கூட்டு குடும்பங்கள் ஜூலை 31 தேதிக்குள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கால நீட்டிப்பு கீழே உள்ள பிரிவினருக்கு மட்டும் தான் என மற்றொரு டிவீட்டில் பதிவுகள் வெளியாகி வருகிறது.
(a) corporate-assesse
(b) non-corporate assesse
(c) working partner of a firm
(d) an assesse who is required to furnish a report under section 92E ஆகிய பிரிவுகளுக்கு மட்டுமே இந்த புதிய கால நீட்டிப்ப என அறிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம்
இந்த குழப்பத்திற்கு மத்தியில் சிக்காமல் ஜூலை 31ஆம் தேதிக்குள்லேயே வருமான வரியை தாக்கல் செய்துக்கொள்ளுங்கள். கடந்த நிதியாண்டு வரையில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யாமல் இருந்தால் அபராதம் விதிக்காத வருமான வரித்துறை தற்போது 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.