கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கிய போது காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளுக்கும் கிட்டத்தட்டச் சமமான தொகுதிகளில் முன்னிலை வகித்ததால் சென்செக்ஸ் மற்றும் நிப்டி என இரண்டும் பிளாட்டாகத் துவங்கியது.
பின்னர்ப் பாஜக 120-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கச் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு அதிகமாக உயர்ந்தது. ஆனால் பிற்பகல் 2 மணிக்கு ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்தால் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என்ற நிலை உருவாகிய உடன் பங்கு சந்தைச் சரிவை நோக்கிச் சென்றது. காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணியைத் தற்போது இரண்டு கட்சிகளும் உறுதியும் செய்துள்ளனர்.
இன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 12.77 புள்ளிகள் என 0.04 புள்ளிகள் சரிந்தும் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 4.75 புள்ளிகள் என 0.04 சதவீதம் சரிந்து 10,801.85 புள்ளிகளாக வர்த்தகத்தினை முடித்துக்கொண்டன.
ஸ்டீல், மின்சாரம், வங்கி துறைகள் அதிகளவில் லாபம் அளித்த நிலையில் ஆட்டோமொபைல், பார்மா உள்ளிட்ட துறைகள் நட்டத்தினை அளித்துள்ளன.
மும்பை பங்கு சந்தையில் லாபம் மற்றும் நட்டம் அளித்த பங்குகள் நிலவரத்தினைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.