ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியானதை அடுத்துச் செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை அதிரடியாக உயரும் என்று வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.
உத்திர பிரதேசத்தில் 15 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியைப் பஜாகப் பிடித்துள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது, இதனால் பஜாக வெற்றிபெற்றுள்ள உத்திர பிரதேசம் இந்திய அரசியல் வட்டாரத்தில் முக்கியமான இடம் என்பதால் உள்நாட்டுச் சந்தை சாதகமாக உள்ளது.
சாதகமான சூழல்
பஜாக உத்திர பிரதேசத்தில் வெற்றிபெற்றதை அடுத்து பங்குச் சந்தை உயர்வுடன் துவங்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. இந்திய அரசியலில் உத்திர பிரதேசத்திற்கு முக்கியமான இடம் உண்டு.
இதனால் மத்திய அரசுக்குப் பல சாதகமான சூழல் உருவாகியுள்ளது என்றும் இந்திய பங்குச் சந்தைக்கும் சாதகமான சூழாக உள்ளதாகவும் கோடக் செக்யூரிட்டீஸ் துணைத் தலைவர் அனிந்தியா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்திய பங்குச் சந்தை
பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை துவங்கும் போது 100 புள்ளிக்கும் அதிகமாக உயரும் என்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.30-66.40 ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
சாதனைப் படைக்குமா?
மேலும் உத்திர பிரதேசத்தில் பஜாகவின் வெற்றியை அடுத்து தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 9,000 புள்ளிகளைக் கடந்து வரலற்றுச் சாதனைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை இன்று தேர்தல் முடிவுகள் என்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற குழப்பத்தில் பிளாட்டாக முடிந்தது.
நிப்டி
தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 0.08 சதவீதம் அதாவது 7.55 புள்ளிகள் உயர்ந்து 8,934.55 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது.
சென்செக்ஸ்
அதேபோன்று மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 0.06 சதவீதம் அதாவது 17.10 புள்ளிகள் உயர்ந்து 28,946.23 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது.